Home Top Ad

ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்ச...

ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும்.

இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும். பூ, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். உடம்பிற்கு பொற்சாயலைத் தரும். வேர், இளைத்த உடலைத் தேற்றும். விதை காமம் பெருக்கும், குளிச்சியுண்டாக்கும்.

ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மாயாமாக மறைந்துவிடும்.

வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரையின் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொண்டு, ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும் அல்லது பூவைக் குடிநீராக்கியும் சாப்பிட்டு வரலாம் அல்லது பூ இதழ்களைச் சேகரித்து, கூட்டு செய்து, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு, 200 மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவில் காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி, உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.

திருமணமா‌கி பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌க்கு ஆவாரை பய‌ன்படு‌கிறது. அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.

‘ஆனந்த யாழை மீட்டுகிறேன்’ பாடலை விட ஒரு உசரமான பாடல், ராம்- நா.முத்துகுமார் காம்பினேஷனில் இனி வரப்போவதில்லை. தன் முதல் படத்திலிருந்தே நா.மு...

‘ஆனந்த யாழை மீட்டுகிறேன்’ பாடலை விட ஒரு உசரமான பாடல், ராம்- நா.முத்துகுமார் காம்பினேஷனில் இனி வரப்போவதில்லை. தன் முதல் படத்திலிருந்தே நா.முத்துகுமாரின் தோழனாகிவிட்ட இயக்குனர் ராம், யுவன் -நா.மு காம்பினேஷனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்.

தனக்கு விருது கொடுத்து கவுரவித்த ஆனந்தவிகடன் மேடையிலேயே ‘நா.முத்துகுமாருக்கு ஏன்யா விருது கொடுக்கலே?’ என்று சண்டைப்போட்ட இந்த சாக்லெட் தோழர், அவரில்லாத சினிமாவை எப்படி எதிர்கொள்வார்?

சின்ன வயதிலேயே இந்த உலகத்தை விட்டுப் போன கவிஞர் நா.முத்துகுமாரை திரையுலகம் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொள்ளும் என்றாலும், ராம் நிறையவே நினைக்கிறார். ‘பேரன்பு’ படத்தில் நா.முத்துகுமார் இல்லையே என்கிற கவலை அவரை வாட்டி எடுப்பதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. நா.முத்துகுமார் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று அந்த விழா மேடையிலேயே சொன்னவரை நோக்கி ஒரு கேள்வியை கேட்கிறார்கள் ரசிகர்கள்.

“ஆமாம்… அவரு இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுதான். அதற்காக யானைக்கு போர்த்திய அம்பாரியில வடகம் காய வச்சுட்டீங்களே வாத்யாரே…” என்கிறார்கள் அவர்கள்.

ஏன் இப்படி புலம்பணும்?

வேறொன்றுமில்லை. இந்தப்படத்தில் நா.முத்துகுமார் எழுதுகிற அளவுக்கு வெயிட்டான ஒரு பாடலை இயக்குனர் ராமின் மனைவி சுமதியே எழுதிவிட்டாராம்.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை காலம் காலமாக ஹீரோ புகழ் பாடுவது, ஹீரோயின் மரத்தை சுற்றி ஆடுவது என்பது மாற்ற முடியாத கலாச்சாரமாக இருந்தது. ஹாலிவு...

தமிழ் சினிமாவை பொறுத்த வரை காலம் காலமாக ஹீரோ புகழ் பாடுவது, ஹீரோயின் மரத்தை சுற்றி ஆடுவது என்பது மாற்ற முடியாத கலாச்சாரமாக இருந்தது. ஹாலிவுட்டில் எல்லாம் தரமான படங்களை கூட ஸ்கேரி மூவி என்ற பெயரில் கிழித்து தொங்கவிடுவார்கள்.

ஆனால், தமிழில் தங்களுக்கே தெரியாமல் 1 கிலோமீட்டருக்கு தாண்டுவது, பாலத்தில் இருந்து குதிப்பது என்று ஹீரோக்கள் பல சேட்டைகள் செய்ய, அதை தன் ஸ்டைலில் வைத்து செய்ய அமுதன் இயக்கிய படம் தான் தமிழ் படம், இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த முறை அதிக கண்டெண்டுடன் களம் இறங்கியுள்ளது தமிழ் படம்-2, இதுவும் முதல் பாகத்தை போல் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதை:

தமிழ் படத்தில் கதை என்று என்ன சொல்வது. பல படத்தின் காட்சிகளின் தொகுப்பு தான் தமிழ் படம்2.

போன முறை டி என்ற வில்லனை தேடி செல்லும் சிவா இந்த முறை வில்லன் பி யை தேடி செல்கின்றார். அந்த பி யை சிவா பிடித்தாரா என்பதை பல படங்களை பங்கம் செய்து கலாய்த்துள்ளார் சி.எஸ்.அமுதன்.

படத்தை பற்றிய அலசல்

சிவா சிவா சிவா ஒன் மேன் ஆர்மியாக மிரட்டியுள்ளார். படம் முழுவதையும் இவர் ஒருத்தரே தாங்கி நிற்கின்றார். சிவா நடந்தால் சிரித்தால் ஏன் கை அசைத்தால் கூட ஆடியன்ஸிடம் விசில் பறக்கின்றது.

படத்தில் பல படங்களை கலாய்ப்பது தான் கான்செப்ட் என்றால் படத்தின் முதல் காட்சியில் டிபேட்டில் தமிழிசையை காலை வாருவதில் இருந்து ஹெச்.ராஜாவை சோத்துக்கு வந்தேன் என சொல்ல வைப்பது, அதோடு சின்னம்மா சபதம் பன்னீர் செல்வம் சத்தியம் என அரசியல் அட்ராசிட்டி செய்துள்ளனர்.

அதிலும் இதில் சதீஷ் மிரட்டியுள்ளார், வில்லன் கெட்டப் போடலாம் அதற்காக 2.0 அக்‌ஷய்குமார் கெட்டப்பெல்லாம் ரொம்ப ஓவர் சார். சதீஷின் திரைப்பயணத்தில் ஆல் டைம் பெஸ்ட்.

செல்வம் நீங்க பழைய செல்வமா திரும்பி வரனும்னு சொல்றப்ப அது மட்டும் முடியாது சார் ஏன்னா நா செல்வமே இல்ல சிவா, போய் புள்ள குட்டிய படிக்க வைங்கடா...ஆனா இன்ஜினியரிங் மட்டும் படிக்க வைக்க வேண்டாம் போன்ற வசனம் கைத்தட்டல் பறக்கின்றது.

மேலும், படத்தில் தமிழ் படங்கள் மட்டுமின்றி ஸ்பீட், கேம் ஆப் துரோன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்கள், சீரியஸுகளையும் கலாய்த்துள்ளனர், தமிழில் டோட்டல் டேமேஜ் என்றால் வேதாளம், விவேகம் காட்சிகள் தான் மொத்த திரையரங்கமும் கொண்டாடுகின்றது, அதேபோல் பாகுபலி, கபாலி காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.

இத்தனை இருந்தும் முதல் பாதி ஒரு சில நேரத்திற்கு பிறகு கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது, ஏனெனில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா? அதேபோல் தான், இன்னமும் கொஞ்சம் முதல் பாதி சுவாரசியப்படுத்தியிருக்கலாம், அதிலும் அடிக்கடி வரும் பாடல்கள் படத்தின் மைனல் முதல் பாதியில்.

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டியே ஆகவேண்டும், வேட்டையாடு விளையாடு காட்சியை ஒரு இடத்தில் கலாய்க்கிறார்கள், அதுக்கூட கமலுக்கு எப்படி ஆங்கிள் வைத்தார்களோ அதேபோல் சிவாவிற்கும், கண்ணனின் இசை கலக்கல் குறிப்பாக பின்னணி இசை, பாடல்கள் திருப்திப்படுத்தவில்லை.

க்ளாப்ஸ்

சிவா ஒருவரை மட்டுமே நம்பி பந்தயம் கட்டலாம்.

படங்களை கலாய்ப்பதை தேர்ந்தெடுத்த விதம், இன்றைய ட்ரெண்டிங் வசனங்களை கூட விட்டு வைக்காமல் கலாய்த்தது ஆடியன்ஸுடன் ஈசியாக கனெக்ட் செய்கின்றது.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது.

ஒரு முறை பார்க்கலாம், அடுத்த முறை சிரிப்பு வருமா என்றால் கேள்விக்குறி தான், அதிலும் அந்த ப்ளாஷ்பேக் காட்சிகள் ஏன் சார் இப்படி.

மொத்தத்தில் சிவா ஒன் மேன் ஆர்மியாக உங்களை கண்டிப்பாக 2.30 மணி நேரம் சந்தோஷப்படுத்துவார், ஆனால், ஒரு முறைக்கு மேல் ரிப்பீட் அடிக்க முடியாது.

பாட்டு இல்லாத வாழ்வு, பாவப்பட்டது…’ என்பதை மெல்லிசை மன்னர்களும், இசைஞானிகளும், இசைப்புயல்களும் ஒவ்வொரு நிமிஷமும் உணர்த்திக் கொண்டே இருக்கிற...

பாட்டு இல்லாத வாழ்வு, பாவப்பட்டது…’ என்பதை மெல்லிசை மன்னர்களும், இசைஞானிகளும், இசைப்புயல்களும் ஒவ்வொரு நிமிஷமும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். தொண்டர்கள் துள்ளலுடன் வேலை பார்க்க… கட்சிகளுக்கும் பாடல்கள் தேவைதானே? அப்படி துள்ளுகிற இசையை புதிய கட்சியான மக்கள் நீதிமய்யத்திற்கு அமைத்து, கமல்ஹாசனை கவர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.

சினேகன் வரிகளில் ஆறு அதிரடியான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் அவர். இந்த பாடல்கள் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. இங்குதான் “மாலை வேண்டாம். பொன்னாடை வேண்டாம். கட் அவுட்டுகள் வேண்டாம். பேனர்கள் வேண்டாம்” என்று ஏகப்பட்ட ‘டாம்’களை அடுக்கினார் கமல். மக்களுக்கு இடையூறு செய்யும் எதுவும் வேண்டாம் என்று சொல்கிற தலைவர்களை பார்ப்பதே அரிதான காலத்தில் கமலின் இந்த …டாம், நிச்சயம் வரவேற்புக்குரியதுதான்.

செம ஜாலி மூடில் இருந்தார் கமல் என்பதை அவரது சிற்றுரையில் உணர முடிந்தது. முக்கியமாக இந்த விழாவின் நாயகர்களான சினேகனையும் தாஜ்நூரையும் பற்றி அவர் பேசியது சம்பந்தப்பட்டவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும்.

“எல்லாருக்கும் முன்னாடி வந்தவர் சினேகன். அட்வான்ஸ் புக்கிங் பண்ணிவிட்டார். நான் எந்த ரூட்ல போகப் போறேன் என்பதை பிக்பாஸ் வீட்ல இருக்கும்போதே புரிஞ்சுகிட்டவர் அவர். நான் வெளியில் வந்ததும் முதல் வேலை உங்களோட சேர்வதுதான் என்று சொன்னார்”

“தாஜ்நூரை அவர் ஒல்லியா இருந்த காலத்திலிருந்தே அறிவேன். திறமையும் எடையும் நாளுக்கு நான் கூடிக்கொண்டே போகிறது. அவரை பார்க்கும் போதெல்லாம் நூர்னு கூப்பிடுறதில்ல. இருநூறு… முன்னூறுன்னு கூப்பிடுவேன். இதை இந்த கூட்டத்தில் சொன்னால் எடை குறைப்பார்னு நம்புகிறேன்” என்று கமல் சொல்ல கூட்டத்தில் பெருத்த கரகோஷம்.

ஒரு தலைவர், தன்னை சார்ந்தவர்களை சட்டாம்பிள்ளை மனப்பான்மையோடு அணுகாமல், நண்பனை போல அணுகுவதுதான் சரி என்று நாட்டுக்கு சொல்வதை போல இருந்தது கமலின் பேச்சு.

அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கார் டயரை விழுந்து கும்பிட்ட ஊரில், இதெல்லாம் புதுசாகவே தெரிகிறது.

தொடரட்டும் கமலின் அன்பும் கேலியும்!

இயற்கையைச் சீரழிக்காத வகையில், இன்று தொடங்கியிருக்கும் இந்த அமர்நாத் புனித யாத்திரை எந்தவிதத் தடங்கலும், பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும...

இயற்கையைச் சீரழிக்காத வகையில், இன்று தொடங்கியிருக்கும் இந்த அமர்நாத் புனித யாத்திரை எந்தவிதத் தடங்கலும், பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
அண்ணாமலையில் அனல், அமர்நாத்தில் பனியாக அருளும் ஈசன்!

இயற்கையில் இறைவனின் வடிவத்தை வணங்குவது, இந்தியர்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை. தூணிலும் துரும்பிலும் உறைபவன் இறைவன் என்பதை நம் புராணங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் சிவலிங்க வடிவத்தை உணர்த்தும் மலைகளும், பாறைகளும், புற்றுகளும் ஏன் சோற்றுப் பருக்கையும்கூட நம் வழிபாட்டுக்கு உரியவை. அனலாக அண்ணாமலையில் எழுந்த ஈசன், பனியாக எழுந்தருளும் தலமே அமர்நாத். இந்தத் தலத்தில் ஈசன் பனிலிங்க வடிவில் திருக்காட்சி அருள்கிறார். உலகாளும் ஈசனின் இருப்பிடமாக இமயம் இருந்துவருகிறது. அங்குத் தோன்றும் நதிகள், நதியில் கிடைக்கும் கற்கள், விருட்சங்கள் யாவுமே சிவவடிவாகக் காட்சியளிக்கின்றன. இமயத்தின் இதயப் பகுதியில் அமைந்த அமர்நாத் பனிலிங்கக் குகைக்கோவில் 5,000 ஆண்டுகள் பழைமையானது. சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை எடுத்துரைத்த புண்ணிய இடம் என்று இது போற்றப்படுகிறது. சக்தி தேவியின் தொண்டை விழுந்த இடம் என்றும், அதனால் இது ஆதி சக்தி பீடங்களில் ஒன்று என்றும் வடநாட்டு பக்தர்களால் கூறப்படுகிறது.

இமயத்தின் அடியிலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து கிட்டத்தட்ட 141 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது அமர்நாத் பனிக்குகைக் கோயில். கடுமையான வானிலைகள், உயிரை வாட்டும் ஆபத்தான மலையேற்றங்கள், உடலை கிடுகிடுக்க வைக்கும் பனிப்பொழிவு, ஆக்சிஜன் குறைபாடு, தீவிரவாத அச்சுறுத்தல்கள்... என இந்தப் பயணம் முழுக்கவே சவாலாக இருந்தாலும், ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி அதாவது, இன்று அமர்நாத் யாத்திரை தொடங்கி, வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் எதுவும் நடைபெறக் கூடாது என்ற எண்ணத்தில், இரு நாள்களுக்கு முன்னர் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். 

உடலும் மனமும் ஒத்துழைக்கவேண்டிய கடுமையான பயணம் அமர்நாத் பனிலிங்க தரிசனப் பயணம். ஸ்ரீநகரிலிருக்கும் ராணுவ மருத்துவமனை முகாமில் ஒவ்வொரு பக்தரின் உடல்தகுதியைப் பரிசோதிக்கிறார்கள். ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய் இருப்பவர்களை இந்தப் பயணத்தில் அனுமதிப்பதில்லை. மேலும், இந்த யாத்திரையில் பங்கு பெற ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறையிடம் காப்பீடு செய்திருக்க வேண்டும் என்பது முக்கிய விதி. பொதுவாக 2,000 முதல் 2,500 எண்ணிக்கையுள்ள பக்தர்களை தனிக்குழுவாக அனுப்பிவைப்பார்கள். ஸ்ரீநகரிலிருந்து பாகல் காவ் என்ற இடத்தைப் பேருந்தில் அடைய வேண்டும். அங்கிருந்து அமர்நாத் நடைப்பயணம் தொடங்கும். வழியெங்கும் கடுமையான பனிப்பொழிவு வாட்டினாலும் இயற்கையின் அழகு, சோர்வைப் போக்கிவிடும். பாகல் காவில் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம். அங்குச் சுவையான ரொட்டிகள் யாத்ரீகர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

நடக்க முடியாதவர்கள் இங்கு டோலி அல்லது கோவேறுக் கழுதைகளின் மீது பயணிக்கலாம். சந்தன் வாரி, சேஷநாத் பகுதிகளைக் கடந்து சென்றால் அமர்நாத் குகையை அடையலாம். வழியெங்கும் லங்கர் என்னும் தங்குமிடம் உண்டு. நீருக்குச் சுவையான ஓடைகள் தென்படும். மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே இருப்பதால், உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளலாம். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் பயணத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் நமது ராணுவ வீரர்கள் இருப்பதால், அவர்களை உதவிக்கு அழைக்கலாம். இந்தப் பயணத்தில் ஆக்சிஜன் குறைவால் சிலர் மரணமடைந்ததும் நிகழ்ந்திருக்கிறது. எனவே, நிதானமாகத் தகுந்த ஆயத்தங்களோடு பயணம் செய்யவேண்டியது அவசியம். கை, கால் உறைகள், குல்லாய், ஷூ, ஸ்வெட்டர், ஜெர்கின் போன்றவற்றை இந்தப் பயணத்தில் அவசியம் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஆங்காங்கே தரப்படும் ஜல்ஜீரா என்ற மருத்துவக் குணம் கொண்ட பானத்தை அருந்துவது நல்லது.

எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு நடந்தால், பனி படர்ந்த மலையின் மத்தியப் பகுதியில் பெரிய குகை தென்படும். குகைக்குள் நுழைந்து உள்ளே சென்றால் அமர்நாத் லிங்கேஸ்வரன் பனிக்கட்டி வடிவில் காட்சியளிப்பார். பெரிய மேடையில் திரிசூலமும், குளிர்ந்த சூழலில் பிரமாண்ட பனிலிங்க வடிவும் காண்பவரை மெய்சிலிர்க்க வைத்துவிடும். தரிசிப்பவர்கள் எல்லோரும் தங்களை மறந்து `ஓம் நமசிவாய', `ஹர ஹர மகாதேவ்', `ஜெய் சிவாய' ,`ஜெய் போலேநாத்'... என்றெல்லாம் பரவசத்துடன் முழங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

எந்தத் தடையுமின்றி பனிலிங்க நாதரை பக்தர்கள் பரவசத்தோடு தரிசிக்கலாம். அண்டங்களையெல்லாம் ரட்சிக்கும் இந்த ஆதிசிவனின் வடிவத்தைக்கொண்டே பலர் இங்கு ஆரூடம் கணிப்பார்கள். சிவலிங்கம் எத்தனை பிரமாண்டமாக உள்ளதோ, அத்தனை செழிப்பு நாட்டில் உருவாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 1945-ம் ஆண்டில் அமர்நாத்தில் விஸ்வரூப பனிலிங்கம் உருவானது. அதன் பிறகுதான் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் குறைந்து, உலகில் அமைதி நிலவியது என்கிறார்கள்.

புராண காலத்திலிருந்தே இந்த அமர்நாத் பனிக்குகை மற்றும் பனிலிங்கம் இருந்து வந்தாலும் காலப்போக்கில் இதன் புகழ் யாருக்கும் தெரியாமல் போனது. 16-ம் நூற்றாண்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஓர் இஸ்லாமியருக்கு இந்தக் குகையும் லிங்கமும் தென்பட்ட பிறகுதான் மீண்டும் வழிபாட்டுக்கு உரியதானது என்கிறார்கள். அதனால் அந்த‌ இஸ்லாமிய‌ குடும்ப‌த்தின் வாரிசுகள்தாம் இன்றும் அமர்நாத் குகையை நிர்வகித்துவருகிறார்கள். இந்துக்களோடு இஸ்லாமியர்களும் இந்த அமர்நாத் பனிலிங்கேஸ்வரனைத் தரிசிக்கிறார்கள். இஸ்லாமியர்கள், `ப‌ர‌ப்பானி பாபா’ அதாவது, `ப‌னிக‌ட்டி பாபா’ என்று ஈசனை வணங்குகிறார்கள்.

பெருகிவரும் கூட்டம், புவி வெப்பமயமாதல், பக்தர்கள் ஏற்றும் தீப தூபங்கள் போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் இந்தப் பகுதியில் வெம்மை கூடி, பனிலிங்கம் சீக்கிரமே உருகிவிடுகிறது என்றும், இது அந்தப் பகுதியின் இயற்கை வளத்துக்கும் கெடுதியானது என்றும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இயற்கையைச் சீரழிக்காத வகையில், இன்று தொடங்கியிருக்கும் இந்த அமர்நாத் புனித யாத்திரை எந்தவிதத் தடங்கலும், பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம். பனிலிங்க நாதரை தரிசிக்கும் சகல பக்தர்களும் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துகிறோம்.  

மிருதன் புகழ்(?) சக்தி சவுந்தர்ராஜனின் மூன்றாவது படம். ஸ்பேஸ் பற்றிய கதையை சில பல ஆங்கில படங்களிலிருந்து அபேஸ் பண்ணி ‘அடித்த’ படம்தான் டிக்...

மிருதன் புகழ்(?) சக்தி சவுந்தர்ராஜனின் மூன்றாவது படம். ஸ்பேஸ் பற்றிய கதையை சில பல ஆங்கில படங்களிலிருந்து அபேஸ் பண்ணி ‘அடித்த’ படம்தான் டிக்டிக்டிக்! ‘அடிச்சதுதான் அடிச்சீங்க. அடிமூளை கிறுகிறுக்கிற அளவுக்கு அடிச்சிருக்க வேணாமா?’ என்று ரசிகர்கள் முணுமுணுத்தாலும், தமிழ்சினிமாவை பொறுத்தவரை இந்தப்படம் புத்தம் புது அனுபவம்தான். மறுப்பதற்கில்லை!

பூமியை நோக்கி வரும் விண்கலம் ஒன்றை வானத்திலேயே வைத்து உடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் நாலு கோடி மக்கள் காலி. என்ன செய்வது? எப்படி நொறுக்குவது? பலவாறாக மண்டையை குடையும் அதிகாரிகள் குழு, ஐவர் குழுவை தேர்ந்தெடுத்து ஸ்பேஸ்சுக்கு அனுப்புகிறது. (அந்த அதிகாரிகள் விஞ்ஞானிகளா, இராணுவத்தினரா…) அதில் மூவர் திருடர்கள். அதிலும் ஒருவர்தான் ஹீரோ ஜெயம் ரவி.

தானுண்டு தன் ஜெயில் தண்டனை உண்டு என்று இருக்கும் அவருக்கு, மேஜிக்கும் கைவந்த கலை. இப்படியாக கிளம்பிப் போகும் ஐவர் குழு, எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுகிறது என்பதுதான் டிக்.டிக்.டிக்.

சரியாக ராக்கெட் மேலே கிளம்புகிற நேரம் பார்த்து “உன் மகனை கடத்திட்டோம். அந்த மிசைல் எங்கிட்ட வந்தாகணும்” என்று வில்லன் எச்சரிக்க, மிசைலை வைத்து விண்கலத்தை உடைப்பதா? வில்லனிடம் கொடுப்பதா? எக்கச்சக்கமாக ஒரு முடிச்சை போடுகிறார் டைரக்டர். அதைவிட பெரிய முடிச்சு நமது மண்டைக்குள். 400 டன் எடையுள்ள அந்த மிசைலை எப்படி யாருக்கும் தெரியாமல் வில்லனிடம் ஒப்படைக்க முடியும்? அந்த வில்லனே ராக்கெட்டின் பெட்ரோல் டேங்கை திறந்துவிடு என்று கூறினால், ராக்கெட் எப்படி மேலே போகும்? போனால்தான் மிசைல் ஹீரோவுக்கு கிடைக்கும்? ஹீரோ வில்லனுக்குக் கொடுப்பான்? அப்படியிருக்க… ஏன் இப்படி சொன்னான் வில்லன்? இப்படியெல்லாம் கேள்விகள் கிளம்பி மண்டை நரம்பு சூடேறுகிறது. போய் தொலையட்டும்…

ஜெயம் ரவியை மட்டுமாவது ரசிக்கலாம் என்றால், மனுஷன் எந்நேரமும் கடுப்பு ராசாவாகவே இருக்கிறார். நல்லவேளை… மொக்கை ஜோக்குகளாக அடித்துத்தள்ளி சற்றே ரிலாக்ஸ் ஆக்குகிறார்கள் ரமேஷ் திலக்கும், அர்ஜுனும்.

இருந்தாலும், ராக்கெட்டில் பயணிக்கிறோம். அதுவும் நாலு கோடி மக்களை காப்பாற்ற என்கிற சிந்தனை சிறிதும் இல்லாமல், டாஸ்மாக் சரக்கோடு அவர்கள் மேலே போகிறார்கள் என்பதெல்லாம் ஜோக்குக்காக என்றாலும், சொரேர் என்கிறது. நல்லா சிந்திக்கிறீங்க சக்தி சவுந்தர்ராஜன். .

படத்தில் ஒரு சீன். ரமேஷ்திலக், அர்ஜுன் காமெடியையெல்லாம் தூக்கி சாப்பிடுகிறது. ‘இந்த சீக்ரெட் ஆபரேஷுனுக்கு ஒரு திருடனை அழைச்சிட்டு போகணுமா?’ என்று கேட்கும் சக அதிகாரிகளுக்கு அவன் திறமையை புரிய வைக்கிறாராம் மேலதிகாரி. எப்படி? பெரிய பெட்டகம் ஒன்றை திறக்கிற பொறுப்பை ஒப்படைக்கிறார் நிவேதா பெத்துராஜ் மற்றும் வின்சென்ட் அசோகனிடம். அவர்கள் மிஷின் கன்களால் சுட்டுமே திறக்காத பெட்டகத்தை அடுத்த அரை நிமிஷத்தில் ஒரு கை அகல வெற்றுத்தாள் மூலம் சாதிக்கிறார் ஜெயம் ரவி. (ஸ்….யப்பா மிடியல)

அந்த விஞ்ஞானிகள் குழுவில் நிவேதா பெத்துராஜும் இருக்கிறார். அந்த ராணுவ உடையும் நச்சென பொருந்தியிருக்கிறது அவருக்கு. மற்றபடி அதிக வேலையில்லை பொண்ணுக்கு.

ஜெயப்ரகாஷ்தான் வில்லன். அவ்ளோ பெரிய அப்பாடக்கர், சின்னூன்டு பையனிடம் அகப்படுவதுதான் இந்தப்படத்தின் ஆகப்பெரிய காமெடி சீன்.

நைந்து போன திரைக்கதைக்கு கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி உயிர் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக். அதையும் உப்புமா கிண்டி வைக்காமல் அர்ப்பணிப்போடு பணியாற்றி படத்தையே காப்பாற்றியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் எஸ்.எஸ்.மூர்த்தி. இவருக்கு சற்றும் சளைக்காத உழைப்பு ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ் மூலம் அமைந்திருக்கிறது. படம் தப்பித்ததென்றால் அதற்கு முழு முதல் காரணம் இவ்விருவர்தான்.

குறும்பா… பாடலில் மெய்மறக்க வைக்கிறார் டி.இமான். அவருக்கு இது 100 வது படம். வெற்றி நடை தொடர்க…

அரைத்த மாவையே அரைக்கக் கூடாது என்கிற ஒரு கொள்கைக்காக டைரக்டர் சக்தி சவுந்தராஜனை பாராட்டலாம். அடுத்த படம் எந்த இங்கிலீஷ் படம்ணே…? அதை நினைச்சாதான் டிக்டிக்டிக்குங்குது மனசு!

முன்குறிப்பு: இணையத்தின் இருட்டுப் பக்கங்கள் குறித்த இந்தப் பதிவு, உங்களை அலர்ட் செய்ய மட்டுமே! டார்க்வெப் - இணையத்தில் அதி தீவிரமாய் உலவ...

முன்குறிப்பு: இணையத்தின் இருட்டுப் பக்கங்கள் குறித்த இந்தப் பதிவு, உங்களை அலர்ட் செய்ய மட்டுமே!

டார்க்வெப் - இணையத்தில் அதி தீவிரமாய் உலவும் ஆட்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாகி இருக்கும். இன்னும் சிலருக்கு சமீபத்தில் கேள்விப்பட்டதை போல இருக்கலாம். கபாலி படம் டார்க்வெப்பில்தான் ரிலீஸுக்கு முன் லீக்கானது. ஆனால் கபாலி பரபரப்பில் இதைப் பற்றி எல்லாரும் மறந்துபோனார்கள். உண்மையில் கபாலியை விட ஆயிரம் மடங்கு திருப்பங்களும் 'திடுக்' குகளும் நிறைந்த இடம் இந்த டார்க்வெப்.

கண்ணுக்குத் தெரியாத இருளுலகம்

நாம் அடிக்கடி விசிட் செய்யும் தளங்களை பட்டியலிட்டால் ஒரு பக்கத்தில் அடங்கிவிடும். ஃபேஸ்புக், ட்விட்டர், ஃப்ளிப்கார்ட், விக்கிப்பீடியா என விரல் விட்டு எண்ணிவிடலாம். இவை எல்லாம் சாதாரணமாக தேடினாலே கிடைத்துவிடும் வகை. இவ்வகை இணையம், Surface web எனப்படுகிறது. அதாவது, எந்த வகை தடையும், மறைப்புமின்றி நீங்கள் தேடியவுடன் சர்ச் ரிசல்ட்டில் வந்து விழும் வகை. இன்னும் சில தளங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் நார்மல் ப்ரவுசரில் எவ்வளவு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம், கூகுள் போன்ற சர்ச் என்ஜின்கள் பயன்படுத்தும் அல்காரிதம்கள், க்ராலிங், இன்டெக்ஸிங் டெக்னிக்குகள் எதுவும் இந்த தளங்களிடம் செல்லுபடியாகாது. இவற்றை டார்க்வெப் அல்லது டீப்வெப் என அழைக்கிறார்கள். இந்த தளங்களை Tor போன்ற ஸ்பெஷல் ப்ரவுசர்களின் வழி மட்டுமே அக்சஸ் செய்ய முடியும். 

Tor வரலாறு

Tor சாஃப்ட்வேரை 90களின் மத்தியில் வடிவமைத்தது அமெரிக்க கடற்படையின் ஆராய்ச்சிப் பிரிவு. அமெரிக்க உளவு ரகசியங்களை, இணையத்தில் மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைத்து வைக்க இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தத் தொடங்கினார்கள். 2004-ல் இந்த கோடிங் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. அதன்பின் The Tor Project, Inc என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் இந்த சாஃப்ட்வேரை வைத்து ஒரு நெட்வொர்க் உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது.


என்ன ஸ்பெஷல் இந்த ப்ரவுசரில்?

நீங்கள் சாதாரணமாக ப்ரவுஸ் செய்யும்போது ஒரு தகவலை தேடுவது, டைரக்ட் டூ வே ட்ராபிக் எனப்படுகிறது. சிம்பிளாக சொல்லப்போனால், உங்கள் கணினியை A என வைத்துக்கொள்வோம். அதில் நீங்கள் தேடும் தகவல் சர்வர் B- ல் ரிக்வ்ஸ்ட்டாக பதிவாகிறது. பின் அதற்கான டேட்டாவை,  சர்வர் உங்கள் கணினிக்கு அனுப்பும். இது முழுக்க முழுக்க A,B ஆகிய இரண்டுக்கும் இடையில் நடக்கும் நேரடித் தகவல் பரிமாற்றம். இந்த முறையில் தகவல் கேட்டது யார், எங்கிருந்து பெறப்பட்டது போன்ற தகவல்களை எளிதில் ட்ரேஸ் செய்துவிடலாம்.

ஆனால் டார் போன்ற ப்ரவுசரில் இந்த டைரக்ட் செயல்முறை இருக்காது. அதே தகவலை நீங்கள் உங்கள் சிஸ்டம் A-வில் இருந்து தேடினால் அது ரேண்டமாக C,F,J,K,O என ஏகப்பட்ட சர்வர்களின் வழி சென்று B-ஐ அடைகிறது. இதனால் சர்வர் B-யில், ரிக்வஸ்ட் விடுத்த சிஸ்டமை பற்றிய தகவல்கள் எதுவும் பதிவாகாது. நம் சிஸ்டமிலும் எந்த சர்வரில் இருந்து நாம் கேட்ட தகவல் பெறப்பட்டது என்ற தகவல் பதிவாகாது. இப்படி சுத்தி விடுவதை 'virtual tunnel' எனக் கூறுகிறார்கள். இந்த ரகசியத்தன்மைதான் டார் ப்ரவுசரின் பலம். டார்க்வெப்பின் கொள்கை.

யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் சிலர் இஷ்டப்பட்டதை இங்கே செய்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக எதையாவது செய்தால் போலீஸ் ஒவ்வொரு சர்வராய் தேடி சம்பந்தப்பட்டவரின் அடையாளத்தை கண்டுபிடிப்பதற்கு மிகுந்த சிரமமாகிவிடும். காரணம், ஒரு தகவலை நான்காயிரம் ரவ்ட்டர்களின் வழிகூட ரிலே செய்ய டார் ப்ரவுசரால் முடியும் என்பதுதான். இதனாலேயே டார்க்வெப்பை onionland எனவும் அழைக்கிறார்கள். வெங்காயத்தை போல பல அடுக்கு பாதுகாப்பு இருப்பதால் இந்தப் பெயர்.

இந்த ப்ரவுசரை இன்ஸ்டால் செய்வது சுலபம். பார்க்க மொஸில்லா ஸர்ச் போலதான் இருக்கும். இதை விண்டோஸில் இன்ஸ்டால் செய்வதை விட லினக்ஸில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

என்னதான் இருக்கிறது டார்க்வெப்பில்?

பொது இணையத்தில் இருப்பது போலவே இங்கும் நல்ல தளங்களும் இருக்கின்றன. தீய தளங்களும் இருக்கின்றன. குறிப்பாக Whistleblowers எனப்படும் அரசாங்கத்தின் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவரும் நபர்கள், பெரிதும் நம்புவது டார்க்வெப்பைதான். அமெரிக்க சி.ஐ.ஏவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென்,  டார்க்வெப்பின் அதி தீவிர ஆதரவாளர். பேரரசுகளின் ரகசியங்களை சாமான்யர்களும் வெளிப்படுத்த முடிவது இங்கேதான் என்பது அவரின் வாதம். 

ஜூலியன் அசாஞ்சேயும், விக்கிலீக்ஸும் பலமாக கால் பதிப்பதற்கு உதவியாய் இருந்தது Tor ப்ரவுசரும், டார்க்வெப்பும்தான். இதுபோக, தங்களை மாபெரும் அரசுகள் கண்காணிப்பதை விரும்பாத தொழில்நுட்ப வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் டார்க்நெட்டை பயன்படுத்துகிறார்கள். அதுவும் சீனா போன்ற இணையக் கட்டுபாடுகள் மிகுந்த நாடுகளில் டார்க்வெப் அரசியல் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவர பெரிதும் பயன்படுகிறது.


இது நாணயத்தின் ஒருபக்கம் மட்டுமே. எல்லாவற்றுக்கும் இருப்பது போல டார்க்வெப்பிற்கும் ஒரு கொடூர முகம் இருக்கிறது. ஆள்கடத்தல், போர்னோக்ராபி, போதை மருந்து வியாபாரம், ஆயுத வியாபாரம், ஹேக்டிவிசம் போன்றவையும் இங்கு எக்கச்சக்கமாக நடக்கின்றன. டார்க்வெப்பில் இருக்கும் டேட்டாக்களில் 15 சதவீதத்திற்கும் மேல் இருப்பது போதைமருந்து வியாபாரம்தான் என்கிறார் கேரத் ஓவன் என்ற ஆராய்ச்சியாளர். 

நாம் ஆன்லைனில் ப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்கள் வாங்குவது போல, வெளி மார்க்கெட்டில் கிடைக்காத போதை மருந்துகள், ஆயுதங்களை விற்க பிரத்யேக தளங்கள் டார்க்வெப்பில் இயங்குகின்றன. இந்த தளங்களில் ஏதாவது ஒன்றை வாங்க விரும்பினால் 'Buy Now' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். உடனே அந்த விற்பனையாளர் அவரின் வங்கிக் கணக்கு எண்ணை அனுப்புவார். அதில் அந்த பொருளுக்கான தொகையை பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் கரன்சி முறையில் செலுத்த வேண்டும். ( இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் இந்திய மதிப்பு 42 ஆயிரம் ரூபாய். கரன்சியை பிட்காயினாக மாற்றித் தருவதற்கென்றே ஏராளமான நிறுவனங்கள் உலகளவில் செயல்படுகின்றன ). இந்த பிட்காயின்கள் Escrow எனப்படும் மூன்றாம் நபரின் அக்கவுன்ட்டில் முதலில் வரவு வைக்கப்படும். வாடிக்கையாளருக்கு பொருள் போய் சேர்ந்தவுடன் விற்றவரின் கணக்கிற்கு பிட்காயின் சென்று சேர்ந்துவிடும். இந்த பாதுகாப்பான நடைமுறை காரணமாக ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் பிட்காயின்கள் டார்க்வெப் சந்தைகளில் புழங்குகின்றன.

இதுபோக, இன்னும் ஏராளமான நெட்வொர்க்குகள் இந்த பரந்த பிரதேசத்தில் இயங்குகின்றன. ஹேக்கர்கள், தங்கள் சேவைகளை குறிப்பிட்ட தொகைக்கு விற்பார்கள். சர்வதேச கூலிப்படைகள், ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் போன்றவையும் இங்கே இயங்குகின்றன. இதுபோக, Cicada 3301 போன்ற கோட்பிரேக்கர்களின் நெட்வொர்க்களும் இங்கே செயல்படுகின்றன. இங்கு நடைபெறும் வர்த்தகம் அனைத்துமே பிட்காயின்கள் கொண்டுதான். 

சாமான்யனுக்குத் தடா!

டார்க்வெப்பை ஏதோ Tor இன்ஸ்டால் செய்தவுடன், ஜஸ்ட் லைக் தட் அக்சஸ் செய்ய முடியாது. சாதாரணமாக எதையாவது தேடினால் லிங்க்களின் வழி அவற்றை கண்டுபிடிக்கலாம். ஆனால் டார்க்வெப் தளங்கள் Node-களை வைத்து செயல்படுகின்றன. எனவே சும்மா தேடினால் எதுவும் கிடைக்காது. இதற்கென பிரத்யேக டைரக்டரிகள் செயல்படுகின்றன. அவற்றை தேடிக் கண்டுபிடிப்பதும் கடினம்தான். இதுபோக, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தளங்கள் ஜாகை மாறிக்கொண்டே இருக்கும். ஒரு தடவை நீங்கள் சென்ற தளம் அடுத்த தடவை காணாமல் போயிருக்கும். அதன் புது நோடை தேடி அலைய வேண்டும். எஃப்.பி.ஐ போன்ற முன்னணி துப்பறியும் நிறுவனங்கள் முடிந்தவரை போர்னோக்ராபி, போதை மருந்து வியாபாரம் போன்றவற்றை தடை செய்யப் போராடுகின்றன. அவர்களின் கையில் மாட்டினால் களிதான். மாட்டமாட்டோம் என அசட்டையாக இருந்த 'சில்க் ரோட்' என்ற பில்லியன் டாலர் நெட்வொர்க்கை 2013-ல் கண்டுபிடித்து, விலங்கு மாட்டியது எஃப்.பி.ஐ. போர்னோக்ராபியை ப்ரவுஸ் செய்தால் நீங்கள் பிளாக்லிஸ்ட் செய்யப்படும் வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே சாமான்யர்கள் விலகி இருப்பதே நல்லது.


'டார்க்வெப்பில் யாரையும் நம்பக்கூடாது. வெப் கேமராவை டேப்பால் கவர் செய்துவிடவேண்டும். அங்கிருக்கும் எந்த ஃபைலையும் டவுன்லோட் செய்துவிடக்கூடாது. அதன் உள்ளே இருக்கும் மால்வேர்கள் உங்களின் டிஜிட்டல் தரவுகளை திருடிவிடலாம். கடைசியாக, அங்கிருக்கும் ஃபோரம்களில் யாரையும் தப்பித் தவறி கூட கிண்டல் செய்துவிடக்கூடாது. அவர்கள் கடுப்பில் உங்கள் சிஸ்டமை ஹேக் செய்து, அத்தனை பெர்சனல் சங்கதிகளையும் முடக்கிவிடலாம். எவ்வளவுக்கு எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்தும் இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டரைவிட டார்க்வெப் நம்மை பயங்கரமாக அடிக்ட் ஆக்கிவிடும். பின் அதிலிருந்து மீள்வது சிரமம். எனவே தேவையில்லாமல் அந்தப்பக்கம் காற்று வாங்கக் கூட போகாதீர்கள்' என எச்சரிக்கிறார் டார்க்வெப்-பை பயன்படுத்தி சலித்துப் போன நண்பர் ஒருவர்.

உண்மைதான். த்ரிலுக்காக அங்கே செல்லத் தொடங்கி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம். இவற்றை எல்லாம் தாண்டி டார்க்வெப் மூலம் நடக்கும் நல்ல விஷயங்களுக்காகவே உலகம் முழுவதும் அதற்கு ஆதரவு அலை வீசுகிறது. சுத்தியலை, ஆணி அறையவும் பயன்படுத்தலாம், ஆளைக் காலி செய்யவும் பயன்படுத்தலாம். டார்க்வெப்பும் சுத்தியல் மாதிரிதான். நாம் பயன்படுத்துவதை பொறுத்து நமக்கு அது எதிர்வினையாற்றும்.