Home Top Ad

 "பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு" என்று தாக்க முயன்ற பாஜகவினருக்கு "சவுண்டு" விட்ட தமிழக எஸ்.ஐக்கு கேரளாவில்...

 "பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு" என்று தாக்க முயன்ற பாஜகவினருக்கு "சவுண்டு" விட்ட தமிழக எஸ்.ஐக்கு கேரளாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

குமரி - கேரள எல்லையில் கேரள அரசுப் பேருந்தை தாக்க முயன்ற பா.ஜ.க-வினரை எதிர்த்து குரல்கொடுத்து பேருந்தைக் காப்பாற்றிய களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யருக்கு பாராட்டுப்பத்திரம் மற்றும் சன்மானம் வழங்குவதாக கேரள அமைச்சர் அறிவித்துள்ளார்.

2 நாளைக்கு முன்னாடி அதாவது 2-ம் தேதி 2 பெண்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய போனார்கள். ஏற்கனவே கொதித்து கிடந்த அம்மாநில பாஜகவினர், இந்த விஷயத்துக்கு பிறகு திரும்பவும் போராட்டங்களில் இறங்கினார்கள். இதற்காக மறுநாள் 3-ம்தேதி பந்த்தை நடத்தினார்கள்.

அடித்து நொறுக்கினர்

அப்போது நூற்றுக்கும் அதிகமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பாஜகவினர் அங்கு போராட்டம் செய்தாலும், கேரள பார்டர் என்பதால், கன்னியாகுமரிக்கும் பரவியது. அங்க இருக்கிற ஆத்திரத்தை எல்லாம் இங்கு வந்து காட்டி, நம் தமிழக பஸ்களையும் கேரள பாஜகவினர் சுக்குநூறாக்கினர்.

எஸ்.ஐ. மோகன அய்யர்

அப்போதுதான் எல்லை பகுதியான களியக்காவிளைக்கும் பாஜகவினர் நுழைந்தனர். அங்கும் எந்த பஸ்களையும் செல்ல விடாமல் அமர்க்களம் செய்தார்கள். அந்த நேரம் பார்த்து, கேரள அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் பாஜகவினர் பாய்ந்து போய் அடிக்க போனார்கள். அப்போது பாதுகாப்பு பணியில் களியக்காவிளை போலீஸ் எஸ்.ஐ. மோகன அய்யர் என்பவர் இருந்தார்.

தொட்டு பாருங்க..

பஸ்ஸை தாக்க வருகிறார்கள் என்று தெரிந்து ஆவேசப்பட்டு, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார். அப்போதும் பாஜகவினர் பஸ்ஸை தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் நரம்புகள் புடைத்து எழுந்த எஸ்.ஐ., "எங்க.. பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு உங்களுக்கு" என்று கர்ஜித்தார்.

ஓட்டம் பிடித்தனர்

இதை பார்த்து பயந்து மிரண்ட பாஜகவினர் பஸ்ஸை எதுவுமே செய்யாமல் ஓட்டம் பிடித்தனர். கேரள பஸ்ஸை தமிழக எஸ்.ஐ. சேதமின்றி காத்த இந்த சம்பவம்தான் இணையத்தில் வைரலானது. எஸ்.ஐ. மோகன அய்யரின் புகழ் கேரளாவரை பரவிவிட்டது. இப்போது, அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் போனில் பேசி வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

தமிழ் சிங்கம்

கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மோகன அய்யருக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. இதை தவிர கேஎஸ்ஆர்டிசி நிறுவனம் 1000 ரூபாய் சன்மானமும் அறிவித்திருக்கிறது. இப்போது நம்ம ஊர் எஸ்.ஐ. மோகன அய்யருக்கு "தமிழ் சிங்கம்" என்ற பட்டப்பெயரை வைத்து அம்மாநில மக்கள் செல்லமாக அழைத்து தங்கள் வாழ்த்து மழையை பல்வேறு ரூபங்களில் பொழிந்து கொண்டிருக்கிறது.

நடிகர் கதிர் போலீசாக நடிக்கும் சத்ரு படத்தின் டீசர் வெளியானது. பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து கதிர் நடிக்கும் படம் சத்ரு. மைல் ஸ்டோன் ...

நடிகர் கதிர் போலீசாக நடிக்கும் சத்ரு படத்தின் டீசர் வெளியானது.

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து கதிர் நடிக்கும் படம் சத்ரு. மைல் ஸ்டோன் மூவிஸ் சார்பில் திரு தயாரித்திருக்கும் இப்படத்தை நவீன் நஞ்சுந்தன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு நடிகர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கதிர் இதில் முதல் முறையாக போலீசாக நடித்துள்ளார். படத்தில் அவர் பேசும், "போலீச அடிக்கிறதெல்லாம் சினிமால தான்... நிஜத்துல சிறுநீர் வரும்" எனும் வசனம் படுமிரட்டலாக இருக்கிறது.

டீசரை பார்க்கும் போது, இது ஒரு போலீஸ் கேங்ஸ்டர் படம் என்பது தெளிவாகிறது. பணத்துக்காக கடுங்குற்றங்களை செய்யும் ஒரு கும்பலுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் சத்ருவாக இருக்க முடியும்.

இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். வில்லனாக புதுமுகங்கள் சிலர் நடிக்கின்றனர்.

விஸ்வாசம் கதை குறித்து புதிய தகவல் பரவி வருகிறது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரி...

விஸ்வாசம் கதை குறித்து புதிய தகவல் பரவி வருகிறது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் கதை இது தான் என்று கூறி ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

இந்த தகவல் உண்மையா என்பதை சிவா தான் உறுதி செய்ய வேண்டும்.

தூக்குதுரை

தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டியை சேர்ந்த தூக்குதுரை ஒரு கேங் லீடராம். தூண்டிவிட்டால் சண்டக்கோழியாக மாறும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளாராம். மனைவி நயன்தாராவுக்கு பிரசவம் நடக்கும்போது அஜித் சிலருடன் மோதிக் கொண்டிருப்பாராம். அதனால் குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர் நயன்தாரா அருகில் இருக்க மாட்டாராம். என் கதையில நான் வில்லன்டா என்று அஜித் ட்ரெய்லரில் சொன்னது உண்மை போன்று.

பிரிவு

என்னையும், குழந்தையையும் விட உங்களுக்கு சண்டை போடுவது தான் முக்கியமா என்று கூறி அஜித்துடன் கோபித்துக் கொண்டு தனியாக போய்விடுவாராம் நயன். பின்னர் அவர் மும்பையில் தனியாக வசிப்பாராம். குழந்தை இறந்துவிட்டதாக அஜித்துக்கு தகவல் வருமாம். 12 ஆண்டுகள் கழித்து தான் அஜித்தும், நயன்தாராவும் சேர்வார்களாம்.

வில்லன்

தனது மகள் உயிருடன் இருப்பதே அஜித்துக்கு ரொம்ப லேட்டாகத் தான் தெரியுமாம். மகளை வில்லன் ஜகபதி பாபுவிடம் இருந்து காப்பாற்றும் வேலையில் இறங்குவாராம் அஜித். இந்த பாசப் போராட்டத்தை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அளிக்கிறார் சிவா என்று கூறப்படுகிறது.

அஜித்

படத்தில் பரபரக்கும் சண்டை காட்சிகள் உள்ளதாம். பாசம், காதல், காமெடி, ஆக்ஷன் என்று அனைத்தையும் சரி சமமான அளவில் கலந்து கொடுத்துள்ளாராம் சிவா. விஸ்வாசம் தல ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக விமானத்தை இயக்கி வந்த 5 பைலட்கள் குறித்து தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் உலகையே அதிர்ச்சியில் ...

நீண்ட நாட்களாக விமானத்தை இயக்கி வந்த 5 பைலட்கள் குறித்து தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரை தலைமையிடமாக கொண்டு, பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (Pakistan International Airlines-PIA) விமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி கொண்டுள்ளது. அரசுகள் மாறினாலும் கூட, இந்த நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


கடந்த ஜூன் மாத இறுதியில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் 36 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது. பாகிஸ்தான் நாட்டின் நிதி அமைச்சகம் மூலம் இந்த தகவல் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த சூழலில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் கல்வி சான்றிதழ்களில் முறைகேடு செய்திருப்பதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை, பாகிஸ்தான் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் நாட்டு உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிர்ச்சிகரமான சில தகவல்கள் தெரியவந்தன.


பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் 7 பைலட்களின் சான்றிதழ்கள் போலியாக இருக்கலாம் என சமீபத்தில் சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தியது.


இதில், 5 பைலட்கள் பள்ளி படிப்பையே தாண்டாதவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இந்த தகவலை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு தெரிவித்தது.

இதன்மூலமாக இந்த தகவல் தற்போது வெளியே தெரியவந்துள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான இஜாசுல் அஹ்ஸான், இவர்கள் பஸ்ஸை இயக்க கூட தகுதியற்றவர்கள் என்று விமர்சித்தார்.

ஆனால் அவர்கள் தற்போது விமானத்தையே இயக்கி கொண்டுள்ளனர். இதன்மூலம் பயணிகளின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது எனவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த சம்பவம் பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தின் பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. என்றாலும் அதற்கு உரிய கல்வி தகுதி மற்றும் இதர பிற தகுதிகளும் கட்டாயம் அவசியம். ஆனால் பாகிஸ்தானில் உரிய கல்வி தகுதி இல்லாமலேயே 5 பேர் பைலட் ஆக வேலைக்கே சேர்ந்து விட்டனர்.

என்றாலும் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் சற்று கடுமையாகவே பின்பற்றப்படுகின்றன. இந்தியாவில் பைலட் ஆக வேண்டும் என்றால், சில அடிப்படையான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து இனி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு நாட்களாக விமானத்தை இயக்கியது இவர்கள்தான்... உலகை அதிர்ச்சியில் உறைய வைத்த திடுக் தகவல்...

முதலில் பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களை படித்திருக்க வேண்டும். அத்துடன் அவற்றில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களையும் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். மாணவர் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

அதே சமயம் தனியார் பைலட் லைசென்ஸ் பெற 17 வயதும், கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெற 18 வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதே சமயம் 17 வயது பூர்த்தியாகியிருந்தால், நேரடியாக பிரைவேட் பைலட் லைசென்சுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆனால் இதற்கு 17 வயது பூர்த்தியாகி இருந்தால் மட்டும் போதாது. 12ம் வகுப்பிலும் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இதன்பின் இந்திய சிவில் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனரகம் தேர்வு ஒன்றை நடத்தும்.

இந்த தேர்வானது விமான வழித்தடங்கள், விமான வானியல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை சார்ந்ததாக இருக்கும். அதே சமயம் ஒரு கண்ணில் பார்வை மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

மருத்துவ மொழியில் இதனை 66 கண்பார்வை என்று அழைக்கின்றனர். அதே சமயம் மற்றொரு கண்ணில் 69 என்ற அளவில் குறைபாடு இருக்கலாம். என்றாலும் 66 என்ற நிலைக்கு இது சரி செய்யப்பட வேண்டும். அதேபோல் பொதுவான உடற்தகுதி என்பதும் கட்டாயமாக தேவை. தினசரி வாழ்க்கை முறையை பாதிக்கும் எந்த வியாதியும் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பல்வேறு அடிப்படையான விஷயங்கள் இங்கு பின்பற்றப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் இந்தியாவிற்கு "உயரமான சிலைகள்" மீதான போதை உருவாகி இருப்பதை நையாண்டியாக தெரிவிக்கும் நோக்கில் மார்க்கண்டேய கட்ஜூ அவர்...

சமீபத்தில் இந்தியாவிற்கு "உயரமான சிலைகள்" மீதான போதை உருவாகி இருப்பதை நையாண்டியாக தெரிவிக்கும் நோக்கில் மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள், சமூக வலைததளத்தில் ஒரு கருத்தை தெரிவித்து. அதில் போகும் போக்கை பார்த்தால் விண்வெளிக்கி செல்ல ராக்கெட்டுகள் தேவைப்படாது, சிலைகள் போதும் என்பது போல் கூறி இருந்தார். அது ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் காதில் விழுந்தது போல ஒரு சோதனை நிகழ்வுள்ளது.

ஜப்பான் நாட்டில் உள்ள ஷிசோக்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரர் ஏஜென்சி (JAXA) உடன் இணைந்து "ஒரு நம்பமுடியாத" திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறது. அது வரவிருக்கும் வாரத்தில் ஒரு மினியேச்சர் பதிப்பு ஸ்பேஸ் லிஃப்ட்டர்களின், அதாவது விண்வெளியை நோக்கி செல்லும் லிஃப்ட் சோதனைகளைத் தொடங்குகிறது. இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையான நாசாவிற்கே வாராத யோசனை ஆச்சே என்று நினைக்கிறீர்கள் தானே? இருக்கலாம்!

விண்வெளி எலிவேட்டர்

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகள் ஆனது குறைந்த தூரத்தில் உள்ள மற்றும் எளிமையான நட்சத்திரங்களை அடையும் நோக்கத்திலான சிறிய சிறிய படிகளை செயல்படுத்தியது. இந்த விண்வெளி எலிவேட்டர் ஆனது 6 செ.மீ உயரம், 3 செ.மீ நீளம், மற்றும் 3 செ.மீ அகலம் கொண்ட ஒரு சிறிய பெட்டியைக் கொண்டிருக்கும். இரண்டு சிறிய க்யூப்சாட்ஸ்க்கு (CubeSats) இடையேயான இடைவெளியில் இடைநிறுத்தப்பட்ட ஒரு 10 மீட்டர் கேபிள் வழியாக இந்த பெட்டி நகரும். பெட்டியின் இயக்கம் செயற்கைக்கோள் வழியாக கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

எலிவேட்டர் டெஸ்ட்

பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு பேட்டியில், "விண்வெளியில் நடத்தப்படும் இந்த எலிவேட்டர் டெஸ்ட் ஆண்டு உலகின் முதன்மையான பரிசோதனையாகும்" என்றார். கடந்த 1895 ஆம் ஆண்டில், ரஷ்ய அறிவியலாளர் ஆன கோன்ஸ்டாண்டின் சியோல்கோவஸ்கி எண்ணத்தில் உதித்த இந்த ஸ்பேஸ் லிஃப்ட் ஆனது சாத்தியப்படாமல் போக பல முக்கியமான காரணங்கள் இருந்தன.

பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு நகரும் ஒரு கேபிள்

ஸ்பேஸ் லிப்டின் முக்கிய யோசனையே, அது செல்ல வேண்டிய இடத்தை சென்று அடையும் வரை, பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு நகரும் ஒரு கேபிள் ஆனது விண்வெளி சுற்றுப்பாதையில் நிலுவையில் இருக்கும் என்பது தான். மற்றொரு முக்கியமான விடயமாக, இந்த கேபிளுக்கு தேவையான பொருள்கள் வேறு எந்தப் பொருளையும் விட இலகுவாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும், அப்போதுதான் விண்வெளியில் கிடைக்கும் அழுத்தத்தை அதனால் தாக்கு பிடிக்க முடியும்.

ஒபாயாஷி

ஷிசோக்கா பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைத்த ஒரு ஜப்பானிய கட்டுமான நிறுவனமான ஒபாயாஷி, 2050 ஆம் ஆண்டுக்குள் ஒரு விண்வெளி எலிவேட்டரை கட்டும் இலக்கைக் கொண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தியபோது, ​​"தற்போதைய தொழில்நுட்பங்களில் இந்த கருத்தை செயல்படுத்தும் அளவிற்கான போதுமானதாக திறன்கள் இல்லை, இருந்தாலும் எங்களின் திட்டம் யதார்த்தமானது என்று கூறப்பட்டு இருந்தது.

96000 கிலோ மீட்டர்

இந்த திட்டத்திற்கு சுமார் 96000 கிலோ மீட்டர் அளவிலான கார்பன் நானோகுழாய் கேபிள்கள், பூமி மீது 400 மீட்டர் விட்டம் கொண்ட 'எர்த் போர்ட்' (அது 12500 டன் எதிர் எடையை தாங்கும் அளவு பலமானதாக இருக்க வேண்டும்) ஆகியவைகள் தேவைப்படுகிறது. கார்பன் நானோகுழாய்கள் எஃகை விட அதிக இழுவிசை வலிமை கொண்டதாக அறியப்படுகின்றன, அதனால் தான் இந்த குறிப்பிட்ட ஸ்பேஸ் எலிவேட்டர் திட்டத்திற்கு அவைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன.

விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி

மிகவும் சாத்தியமற்றகாக கருதப்படும் இந்த விண்வெளி உயர்த்தி (எலிவேட்டர்) ஆனது கட்டமைக்கப்பட்டால் அது எதிர்காலத்தில் சாத்தியமான விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி சுமைகளை குறைக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் தற்போது ஒரு விண்வெளி ஏவுதலுக்கு ஒரு பவுண்டு எடைக்கு சுமார் 40,000 முதல் 50,000 டாலர்கள் வரை செலவு ஆகிறது. ஆனால் இந்த விண்வெளி எலிவேட்டர் சாத்தியம் ஆன (அனுமானங்களின் அடிப்படையிலான ஆரம்ப ஆய்வுகளின் கீழ்) பிறகு பவுண்டுக்கு 100 டாலர்கள் என்கிற நிலை உருவாகலாம். ஆகமொத்தம் எதிர்காலத்தில் நிகழப்போகும் விண்வெளி பயணம் ஆனது நிச்சயமாக மிகவும் உற்சாகமாக இருக்கும்.

தோட்டக்கலையின் மீது பல பேருக்கு ஈடுபாடு உள்ளது. தங்கள் வீட்டை அலங்கரிக்க பூச்செடி தொட்டிகளை வாங்கி குவிப்பார்கள். அவர்களை பொறுத்த வரை தோட்ட...

தோட்டக்கலையின் மீது பல பேருக்கு ஈடுபாடு உள்ளது. தங்கள் வீட்டை அலங்கரிக்க பூச்செடி தொட்டிகளை வாங்கி குவிப்பார்கள். அவர்களை பொறுத்த வரை தோட்டக்கலை என்பது ஓய்வில் செய்யக்கூடிய ஒரு பொழுது போக்காகும். சில நேரம் ஈடுபாட்டையும் தாண்டி உயிராக அதன் மீது நாட்டம் கொண்டுள்ளனர் சிலர்.

நீங்கள் உண்ணுவதற்கு ஆரோக்கியமான காய்கள் மற்றும் பழங்களை கூட வளர்க்கலாம். ஆனால் நகர்ப்புற வீடு என்றால் அவைகளில் சில வேற்றுமைகள் இருக்கும். சில பேரின் வீட்டில் தோட்டத்திற்கென தனி முற்றம் என்பதே இருப்பதில்லை. உங்களுக்கு இந்த கலையின் மீது ஆர்வம் இருந்தும் கூட வீட்டில் இடம் இல்லாத போது ஏமாற்றம் அடைவார்கள் சிலர்.

ஆனால் வருத்தப்படுவதற்கு எதுவுமே இல்லை. தோட்டம் வைப்பதற்கு இடம் இல்லை என்றால் தான் என்ன? அழகிய தொட்டிகளில் சிகளை வைத்து, அவைகளை ஜன்னலின் மீது அல்லது சமையலறை ஜன்னலின் மீது அழகாக அடுக்கி, தோட்டக்கலையின் மீது இருக்கும் உங்கள் ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

ஆர்வம் தான் முக்கியம், அது இருந்தால் அதை எந்த வடிவில் வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். எந்த காலமாகட்டும் அல்லது எந்த இடமாகாட்டும், நாங்கள் கூறும் ரகசியங்களை தெரிந்து கொண்டால், இந்த கலையின் மீதுள்ள ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு தேவையானது எல்லாம் சில தொட்டிகள் மற்றும் என்ன வளர்க்க வேண்டும் என்பது மட்டுமே. மற்றது எல்லாம் பெரிய விஷயம் அல்ல.

சரி, நகர்ப்புற வீட்டில் இருக்கும் நீங்கள் தோட்டக்கலையை மேற்கொள்ள உங்களுக்காக சில ரகசியங்களை கூறப் போகிறோம். ஆர்கானிக் வகை செடிகளை உங்கள் வீட்டில் வளர்க்கலாம். அதனால் இந்த அழகு ரகசியங்களை கவனமாக படியுங்கள்.

கிடைக்கும் இடத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும்

உங்கள் வீட்டிற்கு வெளியே அழகிய முற்றம் ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது எவ்வளவு பெரியது என்பதை கவனியுங்கள். அங்கே போதிய சூரிய வெளிச்சம் விழுகிறதா என்பதை முதலில் கவனியுங்கள். ஒரு வேளை, அங்கே மண் இருந்தால், மண்ணின் வகையை சோதனை செய்யுங்கள். ஆர்கானிக் செடி அல்லது பூ வகையை தேர்ந்தெடுப்பதற்கு முன், முதலில் முற்றத்தின் அனைத்து நிலைகளையும் சோதனை செய்து கொள்ள வேண்டும். ஆம், உங்களுக்கு முழுமையான தோற்றத்தை உண்டாக்கும் ஆசை இருக்கலாம். ஆனால் போதிய இடம் இல்லையென்றால், இருக்கும் இடத்தை எப்படி அழகாக்குவது என்று யோசியுங்கள். ஒரு வேளை, பக்கத்து வீட்டுக்காரருடன் அந்த இடத்தை பகிரும் நிலை ஏற்பட்டால், அவர்களுடன் பேசி அவர்களின் இடத்தை கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். யோசித்துப் பாருங்கள்.

தண்ணீர் வரத்தை சோதனை செய்து கொள்ளுங்கள்

முற்றம் ஏதும் இல்லாமல் தோட்டம் போட விரும்புபவர்கள், மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இது. எங்கிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளீர்கள்? ஹோஸ் பைப் வைத்து தண்ணீர் எடுத்து வர வேண்டுமா அல்லது வாளியில் தண்ணீர் நிறைத்து தூக்கி கொண்டு வர வேண்டுமா? ஒரு வேளை, வாளியில் பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்றால் அது கஷ்டமாக இருக்கும். அதனால் தான் சொன்னோம், தோட்டம் அமைக்கும் முன்பு, போதிய திட்டமிடுதல் தேவை என்று. மேலும் தண்ணீருக்கான கட்டுப்பாட்டின் மீதும் கவனம் தேவை. உங்கள் வீட்டில் கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்சனை இருந்தால், அதற்காக உங்கள் செடிகள் வாடக்கூடாது அல்லவா?

தோட்டம் அமைப்பதை பற்றிய திட்டமிடுதல்

தோட்டத்தை அமைப்பதற்கு முன்பு என்ன செடிகள் வளர்க்கப் போகிறீர்கள் என்பதை திட்டமிடுவது அவசியம். என்ன வளர்க்க போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்: சிறு செடி, உணவு, செடிகள், பூக்கள் போன்றவைகள்.ஒரு வகை செடி தான் வளர்க்க போகிறீர்களா அல்லது அனைத்து வகையிலும் ஒவ்வொன்று வளர்க்க போகிறீர்களா? உங்கள் முதன்மை எதன் மீது என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பிய செடிகளை வளர்க்க இந்த பதில்கள் உங்களுக்கு இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். எவ்வகை செடிகளுக்கு அதிக சூரிய வெளிச்சம் தேவை, தேவையில்லை என்பதையும் தெரிந்து கொள்வீர்கள். போதிய இடம் இல்லாத போது, திட்டமிடுதல் மிகவும் முக்கியம்.

புதுமையான தோட்டம்

போதிய இடம் இல்லாத போது, உங்கள் ஆக்கப்படைப்பை வெளிக்கொண்டு வாருங்கள். எப்போதும் வளர்க்கிற காயையும் பழங்களையும் தான் வளர்க்க வேண்டும் என்றில்லை. நீங்களே ஆராய்ச்சி செய்து, புதுமையான ஒன்றை திட்டமிடுங்கள். இவ்வகை சூழ்நிலைகள் உங்களின் ஆக்கப்படைப்பு உங்களுக்கு பெரிதும் உதவும்.

தலைகீழ் தோட்டம்

தற்போது, இவ்வகை தோட்டத்தை தான், நகர்ப்புற வாசிகள் பலரும் பின்பற்றுகிறார்கள். உண்மையிலேயே இது ஒரு சுவாரஸ்யமான போக்காகும். இந்த முறையால், உங்கள் தோட்டத்தின் அளவு பெரிதாகி, கிடைத்த சிறு இடத்தை நன்றாக பயன்படுத்தலாம். உயரமான தொட்டிகளை பயன்படுத்தி அதில் செடிகளை வையுங்கள். ஜன்னல் பெட்டிகளை பயன்படுத்தினால் இடத்தை அடைக்காமலும் இருக்கும். இந்த ஐடியாவால் கிடைத்த சிறு இடத்தில், அதிகமாக வளர்க்கலாம். கிடைத்த சின்ன இடத்தை பயன்படுத்த கிராதி பெட்டிகளை பயன்படுத்துங்கள்.

வீட்டினுள் தோட்டம்

சிறு செடிகளை வீட்டினுள்ளேயே வளர்க்கலாம். வீட்டினுள்ளேயே பல செடிகளை வளர்க்கலாம். அவைகள் நன்றாக வளர, அதன் மீது சூரிய ஒளி படும் வகையில் ஜன்னல் இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் தேவைப்படும் செடிகளை வீட்டிற்கு வெளியே வளர்க்கலாம்.

உங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக அப்படியே உள்ளதா? கவலை வேண்டாம். இவற்றை ஒழுங்கமைக்க சில குற...

உங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக அப்படியே உள்ளதா? கவலை வேண்டாம்.

இவற்றை ஒழுங்கமைக்க சில குறிப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். உங்கள் பிரிட்ஜில் பொதுவாக மிகவும் குளிரான பகுதி சற்று சூடான பகுதி என்று சில இடங்கள் உள்ளன. ஆகவே குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட இடத்தில் வைப்பதன் மூலம் அதன் தன்மையை அப்படியே பாதுகாக்க முடியும்.

பிரிட்ஜ்

சில பொருட்களை பிரிட்ஜில் தனியாக வைப்பதன் மூலம் அதன் சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக இறைச்சி, பால் பொருட்கள் அல்லது காய்கறிகள், சமைக்காத பொருட்கள் போன்றவற்றை சமைத்த உணவுக்கு அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

உயர் வெப்பநிலையில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை பிரிட்ஜின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும். இந்த இடத்தில் தான் அதிக குளிர்ச்சி இருக்கும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

குறைந்த ஈரப்பதம் அல்லது க்ரிஸ்பர் என்ற பகுதி உங்கள் பிரிட்ஜில் இருந்தால் அந்த இடத்தில் பழங்களை சேமித்து வைக்கலாம். பழங்களுக்கு பொதுவாக குறைந்த ஈரப்பதம் மட்டுமே தேவைப்படும். அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் காய்கறிகளை வைக்க வேண்டும்.

இறைச்சி மற்றும் பால் பொருட்கள்

பிரிட்ஜின் அடிப்பகுதியில் குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் அந்த இடத்தில் இறைச்சியை சேமிக்க வேண்டும். இதனால் மற்ற பொருட்கள் கெட்டுப் போவது தடுக்கப்படும். இறைச்சியின் சாறு பிரிட்ஜில் சொட்டாமல் இருக்கும் விதத்தில் இறைச்சியை கவனமாக மூடி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். குறிப்பாக மற்ற பொருட்களை வைத்து அதன் மேலே உள்ள அடுக்கில் இறைச்சியை வைக்கும்போது அதிக கவனம் தேவை. இந்த பகுதியை அடிக்கடி சுத்தம் செய்து வைப்பது நல்லது.

பிர்ட்ஜின் பாதி பகுதிக்கு மேலே, பால் பொருட்களை சேமித்து வைக்கலாம். முட்டை மற்றும் சமைக்காத மற்ற பொருட்களைக் கூட அந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

மீதமாகும் உணவுகளை எங்கே வைப்பது?

தயார் செய்யப்பட்ட உணவு மற்றும் மீதம் உள்ள உணவை பொதுவாக பிரிட்ஜின் மேல் பகுதியில் வைக்கலாம். இந்த பகுதி மற்ற பகுதிகளை விட சற்று குளிர்ச்சி குறைவாக இருக்கும். இதனால் உணவு எளிதில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்படும். மேலும் மேல் பகுதியில் இவற்றை வைப்பதால் உங்களால் எளிதில் மறக்காமல் அதனை எடுத்து காலி செய்ய முடியும்.


பிரிட்ஜின் கதவு பகுதியில் என்ன வைக்கலாம்?

சுவையூட்டிகள் மற்றும் குளிர்பானங்களை பிரிட்ஜின் கதவு பகுதியில் வைக்கலாம். இந்த பகுதி பிரிட்ஜில் அதிக வெப்பமயமான பகுதி, கதவை அடிக்கடி திறப்பதும் மூடுவதுமாக இருப்பதால் இந்த இடத்தில் இவற்றை வைக்கலாம். குளிர்பானங்களை வைப்பதால் சிந்தும் வாய்ப்பு இருப்பதால் இந்த பகுதியை அடிக்கடி சுத்தம் செய்வதும் அவசியமாகும். இந்த பகுதியில் பால் வைப்பது முற்றிலும் தவறான செயலாகும். பொதுவாக பாலை குளிர்ச்சியான இடத்தில் வைக்கவேண்டும்.