Home Top Ad

ஜான் எட்வர்ட் வார்னாக்கும் அவரது ஆராய்ச்சிக் குழுவினரும் கண்டுபிடித்துதான் இன்டெர்பிரஸ் என்ற கணினி மொழி. அதன் மூலம் உருவாக்கப்படும் கட்டளைக...

ஜான் எட்வர்ட் வார்னாக்கும் அவரது ஆராய்ச்சிக் குழுவினரும் கண்டுபிடித்துதான் இன்டெர்பிரஸ் என்ற கணினி மொழி. அதன் மூலம் உருவாக்கப்படும் கட்டளைகளால் பிரின்ட்டிங் நுட்பத்தை கட்டுப்படுத்தி மெருகேற்ற முடியும் என்று கூறிப் பார்த்தார். ஜெராக்ஸ் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. நண்பர் சார்லஸ் கெஸ்கேவுடன் வேலையை விட்டு, வெளியேறி அடோப் சிஸ்டம் என்ற நிறுவனத்தை உருவாக்குகிறார் 

பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் கணினி செய்த புரட்சி அளப்பரியது. செய்திகளை எழுத்து அச்சுக்களாக கோத்துக்கொண்டு படங்களை அச்சுப்பிரதி எடுப்பதெல்லாம் மிகக் கடினமான, நிறைய மனித உழைப்புகளை கோரும் வேலை. ஒரு சிறு பிழை என்றாலும் திருத்துவது மிக கடினம். இந்த ஸ்டார்ட்அப் உருவாகும் வரை இப்படிதான் சென்று கொண்டிருந்தது அச்சு ஊடகம். அதன் பின் நடந்ததெல்லாம் அசுரத்தனமான மேஜிக்.

அச்சு ஊடகத்தின் கதையையே மாற்றி அமைத்தவர்கள் ஜான் எட்வர்ட் வார்னாக் (John Edward Warnock) மற்றும் சார்லஸ் கெஸ்கே (Charles Geschke). இவர்கள் இருவரும் புகழ்பெற்ற ’ஜெராக்ஸ்’ நிறுவனத்தின் பாலோ ஆல்டோ ரிசர்ச் சென்டரில் ஒன்றாக வேலை பார்த்த விஞ்ஞானிகள்.

வார்னாக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கணித பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்தத் தோல்வியில், அவரை வேறு பள்ளிக்கு மாற்ற வைத்தது. தோல்வி கொடுத்த வலி, பள்ளிப் படிப்பு படித்தபின்னும் கணிதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றும் தீராமல் அதன்பிறகு எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் Ph.D முனைவர் பட்டம் பெறும்வரை தொடர்ந்தது.
படித்து முடித்ததும் சுதர்லாண்ட் நிறுவனத்தில் கொஞ்சகாலமும் அதன் பிறகு ஜெராக்ஸ் நிறுவனத்தில் கொஞ்சகாலமும் வேலைப் பார்த்தார்.

இவருடைய பல கண்டிபிடுப்புகளை ஜெராக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரும் அவரது ஆராய்ச்சிக் குழுவினரும் கண்டுபிடித்துதான் இன்டெர்பிரஸ் என்ற கணினி மொழி. அதன் மூலம் உருவாக்கப்படும் கட்டளைகளால் பிரின்ட்டிங் நுட்பத்தை கட்டுப்படுத்தி மெருகேற்ற முடியும் என்று கூறிப் பார்த்தார். ஜெராக்ஸ் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. நண்பர் சார்லஸ் கெஸ்கேவுடன் வேலையை விட்டு, வெளியேறி அடோப் சிஸ்டம் என்ற நிறுவனத்தை உருவாக்குகிறார்.

வார்னாக்கின் மனைவி மார்வா வார்னாக் ஒரு கிராஃபிக்ஸ் டிசைனர். அவருடைய ஆதரவும் இருந்ததால் அவர்களின் கார் நிறுத்தும் கேரேஜ்ஜில் ஸ்டார்ட்அப்பை ஆரம்பித்தார்கள். அவர்கள் வீட்டிற்கு பின்புறமாக அடோப் என்ற ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. அதன் பெயரையே தங்கள் ஸ்டார்ட்அப்பிற்கும் வைத்தார்கள்.

அடோபின் லோகோவை வடிவமைத்தவர் மார்வா வார்னாக் தான். வார்னாக்கும் கெஸ்கேவும் ஜெராக்ஸ் வேண்டாம் என்று தூக்கி எறிந்த இன்டெர்பிரஸ் என்ற பிரிண்டிங் மொழியை புதுபித்து மெருகேற்றினார்கள். அதற்கு போஸ்ட்ஸ்கிரிப்ட் என்று பெயர் வைத்து வெளியிட்டார்கள். அது தான் முதன்முதலில் சர்வதேச தரத்தில் வெளிவந்த பிரிண்டிங் கணினி மொழி. அது ஆங்கிலம் மட்டுமல்லாது பிற மொழிகளுக்கும் ஏற்ற வகையில் இருந்தது.

இவர்களின் இந்த மொழி நானூறுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உருவாக காரணமாக இருந்தது. இருபதிற்கும் மேற்பட்ட பிரிண்டர் நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருளை வடிவமைக்க உதவியது.

இதன்பின் தான் எழுத்துருவில்(Fonts) புதிய மாற்றங்கள் வந்தன. அதுவரை இரண்டே இரண்டு எழுத்துருக்கள் மட்டுமே இருந்த நிலையை மாற்றி எண்ணற்ற எழுத்துருக்கள் பல மொழிகளில் உருவாக ஆரம்பித்தன. அதற்கு மூலகர்த்தாவாக அடோப் சிஸ்டம்ஸ்ஸின் போஸ்ட்ஸ்கிரிப்ட் இருந்தது. அதன்பிறகே ஆப்பிள் நிறுவனமும், மைக்ரோசாப்ட் நிறுவனமும் எழுத்துரு உருவாக்கத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன.

போஸ்ட்ஸ்கிரிப்ட்டின் உதவியால் இவர்களே உருவாக்கிய மென்பொருள் இல்லஸ்ட்ரேட்டரை உபயோகித்து பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல எவர் வேண்டுமென்றாலும் எழுத்துருக்களை உருவாக்கலாம் என்ற நிலை வந்தது. அடோபின் மகத்தான் சாதனை அது.

இந்தக் காலகட்டத்தில் தான் தாமஸ் நோல் மற்றும் ஜான் நோல் சகோதரர்கள் இவர்களிடம் வந்து ஒரு ராஷ்டர் வகை கிராபிக்ஸ் மென்பொருளை டெமோ கொடுக்கிறார்கள். அதுவரை இல்லாத புது மாதிரியாக இருக்கிறது அந்த மென்பொருள். அவர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கிறார்கள். அங்கும் ஸ்டீவ்ஜாப்ஸ் முன்னிலையில் டெமோ கொடுக்கிறார்கள். அவருக்குப் புரிந்துவிட்டது வருங்கால கிராபிக்ஸ் யுகத்தின் அடிநாதமே இந்த மென்பொருள் தான் என்று.

உடனே இரு நிறுவனங்களும் அவர்களுடன் ஒப்பந்தம் போடுகின்றன. அடோப் அந்த மென்பொருளை வாங்கி மேம்படுத்தி வெளியிடப்போகிறது. அதிலும் ஆப்பிள் கணினியில் மட்டுமே வரப்போகிறது. அது தான் போட்டோஷாப். வெளியிட்ட சில நாள்களிலே அது மிகப் பெரிய ஹிட்.

இந்த ஒரு மென்பொருளை வைத்தே அந்நாளில் மில்லியன் டாலர்கள் சம்பாதித்த நிறுவனங்கள் பல. கிராபிக்ஸ் வேலைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 400 டாலர்கள் விலை வைத்த காலம் அது. பத்திரிகைகள் புதுமையான அட்டைப்படங்களுடன் வந்தன. விளம்பரங்கள் கற்பனையின் உச்சம் தொட்டன. புகைப்படங்களின் அழகு மேம்படுத்தப்பட்டதோடு புகைப்பட பிழைகள் எளிதில் சரிசெய்யப்பட்டன.

அடோப் நிறுவனத்தின் பெயர் பட்டிதொட்டி எங்கும் சேர அவர்களின் போட்டோஷாப் மென்பொருள் வெகுவாக பயன்பட்டது. நிறுவனத்தின் பங்கும் பல மடங்கு ஏறத் தொடங்கியது. இந்த காலக்கட்டத்தில் இவர்களுக்கு இணையாக மேக்ரோமீடியா என்ற நிறுவனம் மிக வலிமையாக போட்டி போட்டது.

மேக்ரோமீடியா அடோப்பை விட பல கிராபிக்ஸ் மற்றும் இணைய மென்பொருள்களை கொண்டுவந்தது. இணையப் பொருளாதார வடிவம் எடுக்கும்போது மிகவிரைவிலும், புதுமையாகவும் வடிவமைக்க பயன்படுத்தபட்டவை தான் Dreamweaver, Flash, Fireworks எல்லாம்.

போட்டியாளர்களை நல்ல விலைக்கொடுத்து வளைத்துக்கொள்வதே கார்ப்பரேட் உலகின் தாரகமந்திரம். அதன்படி அடோப், ட்ரீம்வீவரை விலைக்கு வாங்கியது. இந்த இணைப்பு பிரிண்டிங் மற்றும் இணைய மென்பொருள் உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக அடோபை மாற்றியது. அது இன்றுவரை தொடர்கிறது.

இவர்களின் மென்பொருள் இல்லாத கணினியே இல்லை. பயன்படுத்தாக மனிதர்களே இல்லை; நிறுவனங்களே இல்லை என்பதை இன்னொரு குட்டி டாகுமென்ட் வகை துணை மென்பொருள் உறுதிசெய்தது. அது தான் PDF File. இதன் வடிவமைப்பில் வார்னாக்கின் பங்கு அதிகம். அவர் உருவாக்கிய கேம்லாட் என்ற மென்பொருள் தான் பின்னர் PDF ஆக உருவாகியது. இன்று இது ஒரு சர்வதேச தர உறுதிபாடு கொண்ட பார்மெட். எல்லா அரசாங்க கோப்புகளிலும் கூட இதைப் பயன்படுத்துகிறார்கள்.

அடோப் அதோடு நிற்கவில்லை. வீடியோ எடிட்டிங், கிராபிக்ஸ் போன்றவற்றுக்காகவும் அடோப் பிரீமியர், ஆப்டர்-எப்பெக்ட் போன்ற மென்பொருள்களை கொண்டுவந்தார்கள். இவை வந்த பிறகே கல்யாண வீடுகளில் புதுக் கலாசாரம் உருவாகியது. வீடியோ எடுக்கும் போதே கிராபிக்ஸ் செய்து மாப்பிள்ளை பொண்ணுக்கு இதயம் வரைந்து அம்புவிட்டார்கள். மணமேடையில் இருக்கும் போதே வீடியோவில் சுவிட்சர்லாந்துக்கு பறக்கவிட்டார்கள்.

எண்ணற்ற, புதுமையான பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியதும் இவர்களின் தயாரிப்புகளே. ஒரு புள்ளிவிவரத்தின் படி மூன்று கோடி வேலைவாய்ப்புகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இவர்களின் தயாரிப்புகள் உதவிக் கொண்டிருக்கிறன. இது ஒரு சாதனை.

வருடம் தோறும் ஆறாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் பெரும் நிறுவனமாக, தவிர்க்க இயலாத நிறுவனமாக இது வளர்ந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக, தலைமை செயல் அதிகாரியாக, சேர்மனாக இருப்பவர் சாந்தனு நாராயண் என்ற இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்ட்அப் பாடம்

ஜெராக்ஸ் நிறுவனம் மட்டும் வார்னாக்கின் பேச்சை கேட்டிருந்தால் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் மென்பொருள் மற்றும் வன்பொருள் கொண்ட அசைக்கமுடியாத, வலிமையான இடத்தை அடைந்திருக்கும். இன்று ஜெராக்ஸ்சும் பெரிய நிறுவனம் என்றாலும் தவிர்க்க இயலாத நிறுவனம் என சொல்லமுடியாது. வார்னாக் தன் படைப்பின் மீது கொண்டிருந்த அசாத்திய நம்பிக்கை தான் தன் கண்டுபிடிப்பை நிராகரித்த வேலையை தூக்கி எறிந்துவிட்டு புதிய நிறுவனத்தை தொடங்க வைத்தது.

தோல்வியும் நிராகரிப்பும் தடைகற்கள் அல்ல. புதிய பாதையை காட்டும் திசைகாட்டி. அதை புரிந்துகொண்டவர் அந்த புதிய திசையில் பயணம் செய்து வெற்றி காண்கிறார்கள். சிலர் திரும்பி செல்கிறார்கள். சிலர் அந்த இடத்திலேயே அழுதுகொண்டே காலத்தை கழிக்கிறார்கள். இதில் நீங்கள் யார் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

 சர்க்கரை நோயாளிகள் பிரியாணி சாப்பிடலாமா அல்லது சாப்பிட்டால் என்னவாகும் என்பது குறித்து இங்கு காண்போம். அனைத்து தரப்பு அசைவ உணவு பிரியர்க...

 சர்க்கரை நோயாளிகள் பிரியாணி சாப்பிடலாமா அல்லது சாப்பிட்டால் என்னவாகும் என்பது குறித்து இங்கு காண்போம்.

அனைத்து தரப்பு அசைவ உணவு பிரியர்களுக்கும் பிரதானமான உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியில் சிக்கன், மட்டன், இறால், பீஃப், காடை, மீன், முட்டை என பல வகைகள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலானோர்களின் முதல் தேர்வு சிக்கன் பிரியாணி தான். ஏனெனில், இதன் சுவை மற்றும் குறைவான விலையும் தான் இதற்கு காரணம்.
சிக்கன் பிரியாணி

ஆனால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததா என்றால் சரி என்பது தான் பதிலாகும். சிக்கன் பிரியாணி பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

கலோரிகள் 739.46 அளவும், புரதசத்து 28.89 கிராமும், சோடியம் 1190.58 மில்லி கிராம், பொட்டாசியம் 507.99 மில்லி கிராமும், இரும்புச்சத்து 2.58 மில்லி கிராமும், கால்சியம் 44.37 மில்லி கிராமும், ஜின்க் 2.75 மில்லி கிராமும், நிறையுற்ற கொழுப்புகள் 5.95 கிராமும், கொழுப்புகள் 32.64 கிராமும் சிக்கன் பிரியாணியில் சத்துகள் நிறைந்துள்ளன.

சர்க்கரை நோயாளிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதில் மிகுந்த கவனம் கொள்வதும் அவசியம். முதலில் அந்த பிரியாணி நாட்டுக்கோழி கொண்டு செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அது நன்கு வேக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த பிரியாணியை அளவாக தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டும். சிக்கனில் உள்ள செலினியம் உடலுக்கு நன்மைதான். எனினும் அளவாகவே இந்த பிரியாணியை சாப்பிட வேண்டும்.

எண்ணெய்யை குறைந்த அளவு உபயோகித்து இதனை சமைத்து சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. கொலெஸ்ட்ரால் குறைவான எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

இந்த பிரியாணியை பழுப்பு பாஸ்மதி அரிசியைக் கொண்டே தயார் செய்ய வேண்டும். இதுதான் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்கும். பிரியாணி சாப்பிட்டதும் ஒரு மூலிகை டீ குடிக்கலாம்.
மட்டன் பிரியாணி

சிக்கனை விட மட்டன் பிரியாணி இன்னும் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாகும். ஏனெனில் இதில் வைட்டமின் பி12, ரோபோபிளவின், பாஸ்பரஸ், ஜின்க், இரும்புச்சத்து போன்றவை உள்ளன.

எனவே, இதனை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை குறைந்த அளவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. எனினும், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை இதற்கு பயன்படுத்த வேண்டும். மேலும் செரிமானம் ஆகக்கூடிய மசாலா பொருட்களையும் இதில் பயன்படுத்த வேண்டும். அத்துடன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நல்லது.

அன்றாட சமையலில் வெங்காயம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. வெங்காயத்தை வளையமாக வெட்டி உங்கள் கால்கள...

அன்றாட சமையலில் வெங்காயம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

வெங்காயத்தை வளையமாக வெட்டி உங்கள் கால்களில் இரவு முழுவதும் வைப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்பதை இங்கே படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
எப்படி உபயோகிப்பது

வெங்காயத்தை வளையமாக வெட்டி அதன் பாதத்தின் நடுவில் வைத்து அதற்கு மேல் சாக்ஸ் ஒன்று இரவு முழுவதும் போட்டுவிடுங்கள்.
பயன்கள்

    நச்சுகளை உரிஞ்சிவிடும், இரத்ததை சுத்தம் செய்யும், நுண்ணுயிர்கள் மற்றும் பாக்டீரியாவை அண்ட விடாது. கால்களில் இருந்து வரும் துற்நாற்றம் நீங்கும்.
    காய்ச்சல் சரியாகும்.
    அக்குபஞ்சர் பாயிண்ட்களை தூண்டும்.

கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்...

கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும். அதை சிறுவயதில் நாம் எடுக்கும்பாழுது, விஷம் அதைத் தொடக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லியிருப்பார்கள்.

புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்கான நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அது நம்முடைய வீட்டில் வேறு என்னென்ன மாதிரயான விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு... இனியாவது தெரிஞ்சிக்கோங்க... அதை தூக்கி கீழே வீசிடாதங்க...

சமையலறையில்

பொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும். ஆம்.

நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும்.

மொபைல் நீரில் விழுந்தால்

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான். அதுதாங்க... செல்போனை தண்ணிக்குள்ள போட்றது.

நாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான புானை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் ஜார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது.

ஆவணங்கள்

வீட்டில் இருக்கின்ற முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள் போன்றவை வீணாகிப் போய்விடாமல் செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க வேண்டுமென்றால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பெட்டியிலோ பையிலோ போட்டு வைத்திருங்கள்.

துணிகள் காயவைக்க

நாம் துவைத்து முடித்த ஈரமான துண்டோ அல்லது மற்ற துணி வகைகளோ உடனடியாக உலர்த்த வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த சிலிக்கான் ஜெல் பெரிதும் உதவிசெய்யும்.

ஒரு பக்கெட்டில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு துணிகளைப் போட்டு அதில் ஊறவைத்தால் போதும் துணிகள் உடனடியாக காய்ந்துவிடும்.

கத்தி கூர்மையாக

பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.

துர்நாற்றம்

எப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் புதுசுபோலவே பளபளக்கும்.

வளர்ப்பு பிராணிகள்

நம்முடைய வீடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு பிஸ்கட்டுகள் மற்றும் வேறு சில உணவுகளை கவர்களில் வைத்திருப்போம். அவற்றை நம்முடைய உணவைப் போல சுகாதாரமாக வைத்திருக்க முயந்சி செய்வதில்லை. அதனால் வேகமாகக் கெட்டுப்போய்விடும். அதை தவிர்க்க வேண்டுமென்றால் அந்த உணவு கவர்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வையுங்கள்.

நகைகள்

பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும்.

அலங்காரப் பொருட்கள்

வீட்டில் சில முக்கிய தினங்களன்று மட்டும் தான் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றைத் தொங்கவிடுவோம். முடிந்ததும் அந்த பொருட்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம். அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறங்கள் மங்கியிருக்கும். இதுவே சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசுபோலவே இருக்கும்.

ஜன்னல்கள்

நம்முடைய வீட்டின் ஜன்னல்கள், வாயிற்படி போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை கட்டி வைத்திருந்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் அடையாமல் காக்க முடியும்.

ஷூ துர்நாற்றம்

பொதுவாக எல்லா வீடுகளிலும் நாம் எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் துர்நாற்றங்கள் ஏற்பட்டு விடுகிறது. அப்படி உண்டாகாமல் இருக்க செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் அந்த துர்நாற்றங்களில் இருந்து விடுபட முடியும்.

குறிப்பு

இவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பயன்படும். ஆனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும்.

 "பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு" என்று தாக்க முயன்ற பாஜகவினருக்கு "சவுண்டு" விட்ட தமிழக எஸ்.ஐக்கு கேரளாவில்...

 "பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு" என்று தாக்க முயன்ற பாஜகவினருக்கு "சவுண்டு" விட்ட தமிழக எஸ்.ஐக்கு கேரளாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

குமரி - கேரள எல்லையில் கேரள அரசுப் பேருந்தை தாக்க முயன்ற பா.ஜ.க-வினரை எதிர்த்து குரல்கொடுத்து பேருந்தைக் காப்பாற்றிய களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யருக்கு பாராட்டுப்பத்திரம் மற்றும் சன்மானம் வழங்குவதாக கேரள அமைச்சர் அறிவித்துள்ளார்.

2 நாளைக்கு முன்னாடி அதாவது 2-ம் தேதி 2 பெண்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய போனார்கள். ஏற்கனவே கொதித்து கிடந்த அம்மாநில பாஜகவினர், இந்த விஷயத்துக்கு பிறகு திரும்பவும் போராட்டங்களில் இறங்கினார்கள். இதற்காக மறுநாள் 3-ம்தேதி பந்த்தை நடத்தினார்கள்.

அடித்து நொறுக்கினர்

அப்போது நூற்றுக்கும் அதிகமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பாஜகவினர் அங்கு போராட்டம் செய்தாலும், கேரள பார்டர் என்பதால், கன்னியாகுமரிக்கும் பரவியது. அங்க இருக்கிற ஆத்திரத்தை எல்லாம் இங்கு வந்து காட்டி, நம் தமிழக பஸ்களையும் கேரள பாஜகவினர் சுக்குநூறாக்கினர்.

எஸ்.ஐ. மோகன அய்யர்

அப்போதுதான் எல்லை பகுதியான களியக்காவிளைக்கும் பாஜகவினர் நுழைந்தனர். அங்கும் எந்த பஸ்களையும் செல்ல விடாமல் அமர்க்களம் செய்தார்கள். அந்த நேரம் பார்த்து, கேரள அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் பாஜகவினர் பாய்ந்து போய் அடிக்க போனார்கள். அப்போது பாதுகாப்பு பணியில் களியக்காவிளை போலீஸ் எஸ்.ஐ. மோகன அய்யர் என்பவர் இருந்தார்.

தொட்டு பாருங்க..

பஸ்ஸை தாக்க வருகிறார்கள் என்று தெரிந்து ஆவேசப்பட்டு, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார். அப்போதும் பாஜகவினர் பஸ்ஸை தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் நரம்புகள் புடைத்து எழுந்த எஸ்.ஐ., "எங்க.. பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு உங்களுக்கு" என்று கர்ஜித்தார்.

ஓட்டம் பிடித்தனர்

இதை பார்த்து பயந்து மிரண்ட பாஜகவினர் பஸ்ஸை எதுவுமே செய்யாமல் ஓட்டம் பிடித்தனர். கேரள பஸ்ஸை தமிழக எஸ்.ஐ. சேதமின்றி காத்த இந்த சம்பவம்தான் இணையத்தில் வைரலானது. எஸ்.ஐ. மோகன அய்யரின் புகழ் கேரளாவரை பரவிவிட்டது. இப்போது, அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் போனில் பேசி வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

தமிழ் சிங்கம்

கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மோகன அய்யருக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. இதை தவிர கேஎஸ்ஆர்டிசி நிறுவனம் 1000 ரூபாய் சன்மானமும் அறிவித்திருக்கிறது. இப்போது நம்ம ஊர் எஸ்.ஐ. மோகன அய்யருக்கு "தமிழ் சிங்கம்" என்ற பட்டப்பெயரை வைத்து அம்மாநில மக்கள் செல்லமாக அழைத்து தங்கள் வாழ்த்து மழையை பல்வேறு ரூபங்களில் பொழிந்து கொண்டிருக்கிறது.

நடிகர் கதிர் போலீசாக நடிக்கும் சத்ரு படத்தின் டீசர் வெளியானது. பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து கதிர் நடிக்கும் படம் சத்ரு. மைல் ஸ்டோன் ...

நடிகர் கதிர் போலீசாக நடிக்கும் சத்ரு படத்தின் டீசர் வெளியானது.

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து கதிர் நடிக்கும் படம் சத்ரு. மைல் ஸ்டோன் மூவிஸ் சார்பில் திரு தயாரித்திருக்கும் இப்படத்தை நவீன் நஞ்சுந்தன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு நடிகர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கதிர் இதில் முதல் முறையாக போலீசாக நடித்துள்ளார். படத்தில் அவர் பேசும், "போலீச அடிக்கிறதெல்லாம் சினிமால தான்... நிஜத்துல சிறுநீர் வரும்" எனும் வசனம் படுமிரட்டலாக இருக்கிறது.

டீசரை பார்க்கும் போது, இது ஒரு போலீஸ் கேங்ஸ்டர் படம் என்பது தெளிவாகிறது. பணத்துக்காக கடுங்குற்றங்களை செய்யும் ஒரு கும்பலுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் சத்ருவாக இருக்க முடியும்.

இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். வில்லனாக புதுமுகங்கள் சிலர் நடிக்கின்றனர்.

விஸ்வாசம் கதை குறித்து புதிய தகவல் பரவி வருகிறது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரி...

விஸ்வாசம் கதை குறித்து புதிய தகவல் பரவி வருகிறது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் கதை இது தான் என்று கூறி ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

இந்த தகவல் உண்மையா என்பதை சிவா தான் உறுதி செய்ய வேண்டும்.

தூக்குதுரை

தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டியை சேர்ந்த தூக்குதுரை ஒரு கேங் லீடராம். தூண்டிவிட்டால் சண்டக்கோழியாக மாறும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளாராம். மனைவி நயன்தாராவுக்கு பிரசவம் நடக்கும்போது அஜித் சிலருடன் மோதிக் கொண்டிருப்பாராம். அதனால் குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர் நயன்தாரா அருகில் இருக்க மாட்டாராம். என் கதையில நான் வில்லன்டா என்று அஜித் ட்ரெய்லரில் சொன்னது உண்மை போன்று.

பிரிவு

என்னையும், குழந்தையையும் விட உங்களுக்கு சண்டை போடுவது தான் முக்கியமா என்று கூறி அஜித்துடன் கோபித்துக் கொண்டு தனியாக போய்விடுவாராம் நயன். பின்னர் அவர் மும்பையில் தனியாக வசிப்பாராம். குழந்தை இறந்துவிட்டதாக அஜித்துக்கு தகவல் வருமாம். 12 ஆண்டுகள் கழித்து தான் அஜித்தும், நயன்தாராவும் சேர்வார்களாம்.

வில்லன்

தனது மகள் உயிருடன் இருப்பதே அஜித்துக்கு ரொம்ப லேட்டாகத் தான் தெரியுமாம். மகளை வில்லன் ஜகபதி பாபுவிடம் இருந்து காப்பாற்றும் வேலையில் இறங்குவாராம் அஜித். இந்த பாசப் போராட்டத்தை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அளிக்கிறார் சிவா என்று கூறப்படுகிறது.

அஜித்

படத்தில் பரபரக்கும் சண்டை காட்சிகள் உள்ளதாம். பாசம், காதல், காமெடி, ஆக்ஷன் என்று அனைத்தையும் சரி சமமான அளவில் கலந்து கொடுத்துள்ளாராம் சிவா. விஸ்வாசம் தல ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.