Home Top Ad

ஸ்ரீதேவி இழப்பு இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் கூகுளில் அதிகம் பேர் ஸ்ரீதேவி பற்ற...

ஸ்ரீதேவி இழப்பு இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் கூகுளில் அதிகம் பேர் ஸ்ரீதேவி பற்றி தான் தேடியுள்ளனர்.

ஆனால், அதிகம் ஸ்ரீதேவியை தேடிய மாநிலங்களில் தமிழகம் 20வது இடத்தில் தான் உள்ளது. ஸ்ரீதேவியை விட தமிழகம் மக்களுக்கு சிரியா தான் தற்போது முக்கியம் என்று தெரிந்துள்ளது.

இந்தியாவில் சிரியா குறித்து அதிகம் பேர் தேடியது தமிழகத்தில் தானாம், மேலும், #PrayForSyria என்ற டாக் தமிழகத்தில் தான் அதிகம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை காலமானதை தொடர்ந்து அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. ஆனால் அவருக்குள் பல கஷ்டங்கள் இருந்திருப்பது...

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை காலமானதை தொடர்ந்து அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. ஆனால் அவருக்குள் பல கஷ்டங்கள் இருந்திருப்பது இப்போது தெரியவருகிறது.

சிறு வயது முதலே அவர் சந்தித்த இன்னல்களை என்ன சொல்ல? அவரின் அப்பா தான் சம்பாதித்த பணத்தை மற்றவர்களிடம் கொடுத்து வைத்துள்ளார். பின் அவர் இறந்து போக அந்த பணம் கிடைக்கவில்லை.

அதன்பின் சிலகாலம் கழித்து அவரின் தாய் மூளை பிரச்சனையால் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்தபோது மருத்துவர்கள் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்து இறந்து போனது பெரும் அதிர்ச்சியானது.

அதே நேரத்தில் அவரது அம்மாவும் சில நிறுவனங்கள் மீது பணத்தை முதலீடு செய்துள்ளார். அதுவும் போய்விட்டது. முன்பே அவரது அம்மா மொத்த சொத்தையும் ஸ்ரீதேவியின் பேருக்கே பின்னால் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார்.

அமெரிக்கா சிகிச்சை விசயத்தில் ஸ்ரீதேவி கோர்ட் கேஸ் என பல செலவு செய்துள்ளார். அதே நேரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட அவரின் தங்கை ஸ்ரீலதா தன் அம்மா புத்திசுவாதினமில்லை என சொத்து கேட்டு ஸ்ரீதேவி மீது வழக்கு தொடர்ந்து பாதியை பிடுங்கிக்கொண்டாராம்.

இது போக அவருக்கு அழகின் மீது மிகுந்த அக்கறையாம். இதற்காக பல அறுவை சிகிச்சைகள். நடிகைகளுக்கான சர்ச்சைகள், பட வாய்ப்பு சிக்கல், போனி கபூரின் கடன் என பல இன்னல்களை அனுபவித்துள்ளார்.

இதனால் சென்னையில் உள்ள சில சொத்துக்களை கூட விற்றுவிட்டாராம். மேலும் தனக்கு கிடைத்த புகழ், அந்தஸ்து, வாய்ப்புகள் தன் மகளுக்கும் கிடைக்க வேண்டும் என கவலையும் கூட.

தமிழ் படங்களில் ஒரு பெரும் அடையாள நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. அவரின் மறைவு பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. 80, 90 களில் பெண்...

தமிழ் படங்களில் ஒரு பெரும் அடையாள நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. அவரின் மறைவு பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. 80, 90 களில் பெண்களின் அபிமான நடிகையாக இருந்தவர்.

அவரின் மறைவுக்கு பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகிலேயே தன் குடும்பத்துடன் அவர் செட்டிலாகிவிட்டார். அவர் கடைசியாக தமிழில் நடித்த படம் புலி.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் படங்களில் நடிக்காமலேயே இருந்தார். புலி படத்தின் போது விஜய் தான் அவரிடம் வேண்டுகோள் வைத்தாராம். அவரின் அன்பு கோரிக்கையை ஏற்று உடனே ஓகே சொன்னாராம்.

சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் மறைந்துவிட்டார் ஸ்ரீதேவி. இந்திய சி...

சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் மறைந்துவிட்டார் ஸ்ரீதேவி. இந்திய சினிமாவின் அடையாளம். தனது நடிப்பால், ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவில் ஆரம்பித்த அவரது திரைக் கொடி இந்திய சினிமாவில் அசைக்க முடியாத ஒன்றாக பறந்தது. தென்னிந்தியாவில் இருந்து இந்திக்கு சென்று நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர்.

அங்கும் தன் திறமையால் புகழ்கொடி நாட்டிய ஸ்ரீதேவியின் மறக்க முடியாத 10 கேரக்டர்கள்:

1. மூன்று முடிச்சு ’செல்வி’:
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவி ஹீரோயினாக அறிமுகமான படம். ரஜினி, கமலுடன் போட்டிப் போட்டு நடிக்க வேண்டிய கட்டாயம். இந்தப் படத்தில் இடம்பெற்ற, ’வசந்த கால நதிகளிலே’ பாடல் என்றும் நிலைத்திருக்கும் ஒன்று. இதில் ஸ்ரீதேவியின் கேரக்டரான செல்வி பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று.

2. 16 வயதினிலே ’மயிலு’:
பாரதிராஜாவின் முதல் படம். கமல், ரஜினியுடன் ஸ்ரீதேவியின் நடிப்பும் பேசப்பட்டப் படம். இந்தப் படத்தின் மயிலு கேரக்டருக்கு மயங்காதவர்கள் இல்லை. ‘சப்பாணின்னா சப்புனு அறைஞ்சிரு’ என்று ஸ்ரீதேவி பேசும் வசனம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று.

3. சிகப்பு ரோஜாக்கள், ’சாரதா’:
நடிகர் சிவகுமார் மறுத்ததால் கமல்ஹாசன் நடித்த படம் இது. முதல் இரண்டு கிராமத்துப் படங்களை இயக்கிவிட்டு திரில்லருக்கு வந்த பாரதிராஜா இதிலும் சாதித்தார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் சாரதா கேரக்டர் பிரபலமான ஒன்று.

4. ’ப்ரியா’வின் பிரியா:

எஸ்.பி,முத்துராமன் இயக்கிய படம். ரஜினி ஹீரோ. ப்ரியா என்கிற நடிகையின் வாழ்க்கையை சுற்றிப் பின்னப்பட்ட கதையில் அபாரமாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. அவரது ப்ரியா கேரக்டர் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட ஒன்று.

5. ஜானி ’அர்ச்சனா’
மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த படம். இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, அர்ச்சனா என்ற கேரக்டரில் பாடகியாக கலக்கி இருப்பார். ’என் வானிலே, ஓர் வெண்ணிலா’,  ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘ஒரு இனிய மனது, இசையை சுமந்து செல்லும்’ ஆகிய பாடல்கள் ஸ்ரீதேவிக்கு மேலும் புகழைத் தந்தன.

6. வறுமையின் நிறம் சிவப்பு, ’தேவி’:
கே.பாலசந்தரின் காலத்தால் அழிக்க முடியாத படங்களில் ஒன்று. இதில் தேவியாக நடித்திருந்த ஸ்ரீதேவி, நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டிருப்பார். ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ பாடல் இன்றும் பலரின் நினைவுகளில் தாளமிட்டுக் கொண்டிருக்கிறது. அதில் வரும் ஸ்ரீதேவியின் நடிப்பும்.

7. மூன்றாம் பிறை, ’பாக்யலட்சுமி’:
பாலுமகேந்திராவின் தேசிய விருது வாங்கிய படம். மனநலம் பாதித்தவராக மிரட்டிய ஸ்ரீதேவி, இன்றும் பலர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக கமலுக்கு தேசிய விருது கிடைத்தது. ஸ்ரீதேவிக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் என்ற விமர்சனம் அப்போது எழுந்தது.

8. வாழ்வே மாயம், தேவி:
ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கமல், ஸ்ரீப்ரியா, ஜெய்சங்கர் உட்பட பலர் நடித்த படம். ஸ்ரீதேவி, தேவி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். காதல் படமான இதில், கங்கை அமரனின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட். ஒரு காதலியாக, கமலால் நிராகரிக்கப்படும்போது கோபமான பெண்ணாக, உண்மை தெரிந்து கலங்கும் கடைசி கட்டம் என ஸ்ரீதேவி மிரட்டியிருப்பார்.

9. நான் அடிமை இல்லை, ‘பிரியா’:
ரஜினியுடன் ஸ்ரீதேவி நடித்த படம். துவாரகநாத் தயாரித்து இயக்கிய, இந்த படத்தில் காதலி, மனைவி என அசத்தியிருப்பார் ஸ்ரீதேவி. விஜய் ஆனந்த் இசையில், ’ஒரு ஜீவன் தான்’ உட்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இந்தி சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிய ஸ்ரீதேவி, அதற்கு முன் கடைசியாக (1986-ம் ஆண்டு) நடித்த தமிழ்ப் படம் இது. 

10. இங்கிலீஷ் விங்கிலிஷ், சஷி காட்போலே:
இந்தப் படத்தில் ஆங்கிலம் தெரியாத ஒரு மிடில் கிளாஸ் அம்மாவின் யதார்த்தமான நடிப்பை, அப்படியே அள்ளித் தந்திருந்தார் ஸ்ரீதேவி. அவரது பதற்றம், அமெரிக்காவில் தடுமாற்றம் என அவரது இயல்பான நடிப்பில் தங்களை உணர்ந்த பெண்கள் பலர்.

இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இந்த தகவல் சினிமா துறையில் உள்ளவர்கள் மற்ற...


இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இந்த தகவல் சினிமா துறையில் உள்ளவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஸ்ரீதேவி நடிகர் Mohit Marwah வின் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார், அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. 54 வயதாகும் அவர் நேற்று இரவு 11 - 11.30 மணிக்கு இறந்துவிட்டார் என நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் இளைய மகள் அவரோடு சென்றுள்ளார். மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் நடித்துவருவதால் அவர் ஸ்ரீதேவியோடு செல்லவில்லை.

ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய தகவல் அறிந்து பிரபலங்கள் பலர் ஜான்விக்கு ஆறுதல் கூறுவதற்காக தற்போது அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர்.

தொப்பை ஒருவருக்கு வர ஆரம்பித்தால், அதுவே பல நோய்களை அழையா விருந்தாளியாக உடலினுள் நுழையச் செய்யும். எனவே தொப்பையைக் கரைத்து, தட்டையான வயிற்ற...

தொப்பை ஒருவருக்கு வர ஆரம்பித்தால், அதுவே பல நோய்களை அழையா விருந்தாளியாக உடலினுள் நுழையச் செய்யும்.

எனவே தொப்பையைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத மருந்து குறித்து இங்கு கொடுக்கபட்டுள்ளது. அதைப் படித்து குடித்து சிக்கென்று மாறுங்கள்.
தேவையான பொருட்கள்

    சியா விதைகள் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்

சியா விதைகள் சியா விதைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதில் உள்ள புரோட்டீன் கொழுப்புக்களை எதிர்த்துப் போராடும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்கும்.

தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு, தொப்பையைக் குறைக்கவும் உதவி புரியும்.
தயாரிக்கும் முறை

ஒரு பௌலில் சியா விதைகளைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த விதைகளை மற்றொரு பௌலில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்தால், தொப்பையைக் குறைக்கும் அற்புத மருந்து தயார்!
உட்கொள்ளும் முறை

தயாரித்து வைத்துள்ள இந்த கலவையை தினமும் காலையில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால், தொப்பை குறைந்திருப்பதைக் காணலாம்.

இந்தியாவில் வரும் ஜூலை மாதம் முதல் புதிய மொபைல் நம்பர்கள் 13 இலக்கு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஜூலை 1, 2018 முதல்...

இந்தியாவில் வரும் ஜூலை மாதம் முதல் புதிய மொபைல் நம்பர்கள் 13 இலக்கு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஜூலை 1, 2018 முதல் வழங்கப்படும் புதிய மொபைல் நம்பர்களில் 13 இலக்ககளை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் 10 இலக்க மொபைல் நம்பர்களும் 13 இலக்ககளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய டெலிகாம் துறை சார்பில் இசட்.டி.இ. டெலிகாம் (ZTE Telecom) மற்றும் நோக்கியா சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்ஸ் (Nokia Solutions Networks) போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கும் அறிக்கையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஐடி மற்றும் இது தொடர்பான அனைத்து சிஸ்டம்களிலும் 13 இலக்க மொபைல் நம்பர்கள் ஜூலை 1, 2018க்குள் மாற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது பயன்படுத்தப்படும் 10 இலக்க மொபைல் நம்பர்களை 13 இலக்ககளாக மாற்றம் செய்ய அக்டோபர் 1, 2018 முதல் டிசம்பர் 31, 2018க்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இதில் புதிய 10 இலக்க நம்பர்களை வழங்க முடிவு செய்து இறுதியில் 13 இலக்ககளுக்கு மாற்றுவது தவிர வேறு வழியில்லை என்ற முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்தியாவில் 13 இலக்க மொபைல் நம்பர் மாற்றம் செய்யப்படும் போது, நீண்ட இலக்ககள் கொண்ட மொபைல் நம்பர் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும். தற்சமயம் பகுதி குறியீடு சேர்க்காமல் 11 இலக்க மொபைல் நம்பர் பயன்படுத்தும் சீனா உலகின் நீண்ட மொபைல் நம்பர் கொண்ட நாடாக இருக்கிறது.