நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என உச்சக்கட்ட வளர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு நேற்று நடந்த விஜய் விருது விழா...
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என உச்சக்கட்ட வளர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு நேற்று நடந்த விஜய் விருது விழாவில் Best Entertainer விருது வழங்கப்பட்டது.
அது பற்றி பேசிய அவர் "ரசிகர்களின் ஆதரவால் சுமார் மூஞ்சியுடன் நான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துள்ளேன். என்னை விட திறமையாக, அதிக அழகான நடிகர்கள் உள்ளார்கள்" என கூறினார்.
2014ல் நடந்த விஜய் விருது விழாவில் தலைவா படத்திற்காக விஜய் விருது வாங்க வந்திருந்தார். அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என ஒரு கலவரமே நடந்துகொண்டிருந்த நேரம் அது. அது பற்றி அவரிடம் கேட்டபோது "நான் எப்போதும் பழையதை மறக்கமாட்டேன். எனக்கு அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் மீது எப்போதும் ஆசையில்லை. என்னை விட திறமையான நடிகர்கள், அதிக அழகான நடிகர்கள் இங்கே உள்ளார்கள்" என பேசினார்.
விஜய் பேசியதை 4 வருடங்கள் கழித்து அப்படியே தனுஷ் இன்று விஜய் விருது விழாவில் பேசியுள்ளார்.
விஜய் அவார்ட்ஸ் 10வது வருடத்தில் நேற்று காலடி எடுத்து வைத்தது. பலரும் இந்த விருது விழாவிற்கு நிறைய நட்சத்திரங்கள் வருவார்கள் என்று எதிர்ப்ப...
விஜய் அவார்ட்ஸ் 10வது வருடத்தில் நேற்று காலடி எடுத்து வைத்தது. பலரும் இந்த விருது விழாவிற்கு நிறைய நட்சத்திரங்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்த்தனர்.
ஆனால், எதிர்ப்பார்த்தது போல் பெரிய நட்சத்திரங்கள் யாருமே வரவில்லை, அதிலும் விஜய்க்கு பேவரட் நடிகர் கொடுக்காதது ரசிகர்களை செம்ம கோபத்தில் ஆழ்த்தியது.
அதே நேரத்தில் சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் விருதும் வழங்கப்படவே இல்லையாம், கடந்த வருடம் வெளிவந்த தீரன் பட சண்டைக்காட்சிகளை புகழாதவர்கள் யாருமில்லை.
அப்படியிருக்க ஸ்டண்ட் விருது கொடுக்காதது பலருக்கும் அதிர்ச்சி தான்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு கூடிவிட்டது. நாட்கள் நெருங்கவிட்டது. இரண்டாம் சீசனை நோக்கி நக...
கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு கூடிவிட்டது. நாட்கள் நெருங்கவிட்டது. இரண்டாம் சீசனை நோக்கி நகரும் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆரவ், ஓவியா, சினேகன், ஜூலி, காயத்திரி என பலரும் ஒரு விதத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்கள். சிலர் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளானார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சீசன் 2 ன் டீசர் வெளியானது. அதனை தொடர்ந்து அண்மையில் புரமோவும் வெளியானது. நல்லவர் யார் கெட்டவர் யார் என கமலின் கேள்வி கணைகள் தொடங்கிவிட்டது.
ஜூன் இரண்டாம் வாரம் 11 ம் தேதி, 19 ம் தேதி இந்நிகழ்ச்சி வரும் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி வரும் ஜூன் 17 ல் தான் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
“கிள்ளிக் கொடுக்க மாட்டான்... இவன் அள்ளி அள்ளிக் கொடுப்பான்” என்பது தமிழக மாஸ் ஹீரோக்களுக்கான டயலாக்தான். ஆனால், அதை டெலிகாம் நிறுவனங்களில்...
“கிள்ளிக் கொடுக்க மாட்டான்... இவன் அள்ளி அள்ளிக் கொடுப்பான்” என்பது தமிழக மாஸ் ஹீரோக்களுக்கான டயலாக்தான். ஆனால், அதை டெலிகாம் நிறுவனங்களில் ஜியோவுக்கும் சொல்லலாம். மாதம் ஒரு ஆஃபர்; வாரம் ஒரு டிஸ்கவுன்ட் எனத் தள்ளுபடித் தள்ளுவண்டி நடத்தும் ஜியோவின் அடுத்த ஆஃபரின் பெயர், “ஹாலிடே ஹங்காமா.”
இப்போதிருக்கும் பிளான் இதுதான். 84 நாள்களுக்குத் தினமும் 1.5ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்கள் உண்டு. இந்த பிளானில், இப்போது 100 ரூபாய் தள்ளுபடிதருகிறது ஜியோ. அப்படியென்றால், 84 நாள்களுக்கு தடையின்றி மொபைல், கால், டேட்டா பயன்படுத்த வெறும் 299 ரூபாய் மட்டுமே. ஒரு நாளைக்குக் கணக்கிட்டால் ரூபாய் 3.55 மட்டுமே.
இந்த ஆஃபரை My Jio app அல்லது Phonepay மூலம் ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கும். உடனடித் தள்ளுபடியாக 50 ரூபாயும், ரீசார்ஜ் செய்தபின் கேஷ்பேக்காக 50 ரூபாயும் கிடைக்கும்.
குறைந்த கால ஆஃபரான ஹாலிடே ஹங்காமா, ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை மட்டுமே என இப்போது சொல்லியிருக்கிறது ஜியோ. அதன்பின், இதே ஆஃபர் நீட்டிக்கப்படலாம் அல்லது இதேபோல வேறு ஒரு ஆஃபர் வரலாம் என்கிறது, ஜியோவின் வரலாறு. இருந்தாலும், ரிஸ்க் எடுக்காமல் இப்போதே இந்த ஆஃபரைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.
தொகுப்பாளர்களில் இப்போது பல ரசிகர்களின் பேராதரவோடு முன்னணியில் இருப்பவர் மாகாபா ஆனந்த். இவருக்கு சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சி சிறந்த த...
தொகுப்பாளர்களில் இப்போது பல ரசிகர்களின் பேராதரவோடு முன்னணியில் இருப்பவர் மாகாபா ஆனந்த். இவருக்கு சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சி சிறந்த தொகுப்பாளர் என்ற விருதினை கொடுத்திருந்தனர்.
இப்போது என்னவென்றால் மாகாபா ஆனந்த் ஏன் எப்போதும் கண்ணாடி அணிந்து நிகழ்ச்சி செய்கிறார் என்ற பெரிய கேள்வி எழும்பியது. அதற்கு மாகாபா பேட்டியில், ஒரு விஷயமும் கிடையாது. நிகழ்ச்சி செய்யும் போது வெளிச்சம் அதிகமாக இருந்தால் என் கண் சிறிது நேரத்தில் அடிக்க ஆரம்பித்துவிடும்.
அதை தவிர்க்கவே நான் கண்ணாடிகளை அணிகிறேன் மற்றபடி எதுவும் இல்லை என கூறியுள்ளார்.
நம் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட செயலியான வாட்ஸ் அப் -பை உலகம் முழுக்க சுமார் 100 கோடி பேர் தினமும் பயன்படுத்தி வரும் சூழலில் இந்தியாவில்...
நம் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட செயலியான வாட்ஸ் அப் -பை உலகம் முழுக்க சுமார் 100 கோடி பேர் தினமும் பயன்படுத்தி வரும் சூழலில் இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து வகிறது .அதையொட்டி ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செயலியில் பேமென்ட்ஸ் வசதி வழங்குவதற்கான பணிகளை செய்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவை சேவைகளை வழங்க காத்திருக்கின்றது. இதற்கான பணிகள் முறையான சிஸ்டம்கள் இல்லாததால் தாமதமாகி வருகிறது.அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் முதற்கட்டமாக பாரத ஸ்டேட் வங்கியின் சேவையை மட்டும் சப்போர்ட் செய்யும் படி பேமென்ட்ஸ் வசதியை வழங்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று நிறுவனங்களுடன் இணைந்து இந்த வசதி வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
இத்தனைக்கும் 2018 பிப்ரவரி மாதம் முதல் பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் அம்சத்தில் ரிக்வஸ்ட் மனி (request money) ஆப்ஷன் இன்வைட் முறையில் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது பேமென்ட்ஸ் அம்சம் பேடிஎம் மற்றும் கூகுள் டெஸ் உள்ளிட்டவற்றுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்சமயம் வரை வாட்ஸ்அப் செயலியை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது பேடிஎம் சேவையை பயன்படுத்துவோரை விட சுமார் 20 மடங்கு அதிகம் ஆகும். முன்னதாக அலிபாபவின் பேடிஎம் வாட்ஸ்அப் யுபிஐ பேமென்ட் தளம் முறையான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இளம் இயக்குனார் கார்த்திக் இறைவி, ஜிக...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இளம் இயக்குனார் கார்த்திக் இறைவி, ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கியவர்.
ஏற்கனவே புதிய படத்தின் அதிகார்ப்பூர்வ தகவல்கள் வெளியாகிவிட்டது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவலும் உறுதியாகிவிட்டது. மேலும் சிம்ரன் இப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நேரத்தில் அவர் இன்னொரு வில்லன் என சொல்லப்பட்டு வருகிறது.
இந்த புதிய படத்தின் ஷூட்டிங் டேராடூனில் ஜூன் 7 அல்லது 9 ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாம். இதற்காக படக்குழு அங்கு கூடியள்ளது. இப்படம் மதுரையை மையப்படுத்திய இரு நண்பர்களின் கதையாம். இதில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக இன்னொரு நடிகர் நடிக்கவுள்ளாராம்.
அதோடு மதுரை சம்மந்தப்பட்ட காட்சிகளை டேராடூனிலேயே படமாக்கவுள்ளார்களாம். மீதமுள்ள நடிகர்கள், நடிகைகள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us