Home Top Ad

பத்மநாபசுவாமிகோயில் பற்றிய பல செய்திகளை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம். அதன் கட்டுமானம், வரலாறு பொக்கிஷம் என பெரும்பாலானவை நமக்கு தெரிந்தவைத...

பத்மநாபசுவாமிகோயில் பற்றிய பல செய்திகளை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம். அதன் கட்டுமானம், வரலாறு பொக்கிஷம் என பெரும்பாலானவை நமக்கு தெரிந்தவைதான்.

பத்மநாபசுவாமி கோயில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பகவான் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். இது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

குறித்த ஆலயத்தில் சேம்பர் பி என அழைக்கப்படும் மர்ம அறை மற்ற அறைகளைப் போலல்லாது பத்மநாபசுவாமியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மர்ம அறை திறக்கப்பட்டால் உலகம் அழியும் என பத்மநாபசுவாமியின் பக்தர்கள் திடகாத்திரமாக நம்புகின்றனர். இங்கு உயிருடன் நாகம் இருப்பதாகவும், இதனால்தான் திறக்க மறுப்பதாகவும் கூறுகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆர்யா விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இதற்காக நவீன சுயம்வர நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில்...

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆர்யா விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இதற்காக நவீன சுயம்வர நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் எல்லா தரப்பு பின்னணியிலுமிருந்து 16 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கனடாவிலிருந்து சூசனா என்ற ஒரு இலங்கை பெண் வந்துள்ளார். இவர் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணராக உள்ளாராம்.

இவர் ஆர்யாவிடம் பேசுகையில், உங்களிடம் ஒரு விஷயம் சொல்லனும். அதாவது நான் விவாகரத்தானவர், எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற தகவலை கூறியுள்ளார்.

இதைக்கேட்ட ஆர்யா கொஞ்சம் ஷாக்காகியுள்ளார். இனி எந்த மாதிரியான முடிவு எடுப்பார் என அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.

அமானுஷ்யத்தை அடிப்படையாகக் கொண்டு 6 இயக்குநர்களால் உருவாக்கப்பட்ட 6 கதைகளின் தொகுப்பே 6 அத்தியாயம்.  சூப்பர் ஹீரோ சுப்பிரமணி தன்னை ஒரு சூ...

அமானுஷ்யத்தை அடிப்படையாகக் கொண்டு 6 இயக்குநர்களால் உருவாக்கப்பட்ட 6 கதைகளின் தொகுப்பே 6 அத்தியாயம். 

சூப்பர் ஹீரோ

சுப்பிரமணி தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாகக் கருதுகிறார். ஆந்திராவில் நடக்க இருந்த ஒரு ரயில் விபத்தை சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள மொட்டைமாடியில் இருந்தபடி தடுத்ததாகக் கூறுகிறார். வீட்டில் அவர் சாகசத்தை யாரும் நம்பத் தயாராக இல்லாததால் ஒரு மனநல மருத்துவர் முன் தன் கதையைச் சொல்கிறார். ஆதாரம் இருக்கா? என மருத்துவர் கேட்க, விமான விபத்தைத் தடுத்ததாகவும், ஸ்பென்சரில் வெடிக்க இருந்த வெடிகுண்டை எடுத்து கடற்கரையில் வீசியதாகவும் விவரிக்கிறார். இதை நம்புவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்த மனநல மருத்துவர் சுப்பிரமணியைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். நாளை சோதனைக்கு வா என்று சொல்லி, மிகப் பெரிய ஒரு பரிசோதனை முயற்சிக்கு தன்னை தயார்படுத்திக் கொள்கிறார் மருத்துவர். அந்த முயற்சி என்ன என்பது கிளைமேக்ஸ்.

சுப்பிரமணியாக தமன் குமார் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னை யாரும் நம்புவதே இல்லை என்ற கவலையை அவர் வெளிப்படுத்தும் விதம் ரசனை. மனநல மருத்துவராக இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். கேபிள் ஷங்கர் இயக்கிய இந்தப் படம் மிக முக்கியமான உளவியல் கூறைப் பேசுகிறது. ஆனால், முடிவை நம் யூகத்துக்கே விட்டு விடுவதால் படத்துக்கான பலம் உடைபடுகிறது.

இது தொடரும்

சாதாரணமாக பந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுமி, ஒருவரைப் பார்த்து அதிகம் பயப்படுகிறார். அவர் வருவது தெரிந்தாலே தடம் தெரியாமல் இருக்க ஒளிந்து கொள்கிறார். இதைக் கவனிக்கும் ஒரு இளம்பெண் ஏன் அவரைப் பார்த்து அச்சப்படுகிறாய்? என்று கேட்கிறார். அதற்கு ஒரு அதிர்ச்சியான பிளாஷ்பேக் சொல்கிறார் அந்தச் சிறுமி.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை அழுத்தமாகச் சொல்ல வேண்டிய படம் வெறுமனே கடந்துபோகிறது.

பாப் சுரேஷ், திவ்யா, சிறுமி சாதன்யா ஆகிய மூவரின் நடிப்பிலும் செயற்கைத் தன்மையே மிஞ்சுகிறது. வலுவாகச் சொல்ல வேண்டிய கருத்தை மிக சாதாரணமான காட்சிகளில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சங்கர் தியாகராஜன்.

மிசை

கல்லூரி இளைஞன் கிஷோர் தன்னுடன் படிக்கும் மதுஸ்ரீயைக் காதலிக்கிறார். அறை நண்பர்கள் இருவருக்கும் தெரியாமல் காதலை வளர்க்கிறார். கிஷோர் மீதான கோபத்தில் இருக்கும் அறை நண்பர்கள் பிரசன்னா கதிரும், ரான்டில்யாவும் அவனைப் பழிவாங்கும் நோக்கத்தோடு மதுஸ்ரீயின் புகைப்படத்துக்கு மாறி மாறி முத்தம் கொடுக்கிறார்கள். இதை அறிந்த கிஷோர் அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கத்தியுடன் வர, அங்கே திடீரென்று மதுஸ்ரீ என்ட்ரி ஆகிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே மிசை.

கதையிலும், தொழில்நுட்ப ரீதியிலும் பலவீனம் மட்டுமே தெரிகிறது. இயக்குநர் அஜயன் பாலாவின் திரை மொழி நம்மை எவ்விதத்திலும் கட்டிப்போடவில்லை. யூகித்த மாதிரியே கிளைமாக்ஸ் அமைந்துவிடுகிறது.

அனாமிகா

மாமா கேபிள் ஷங்கரின் நீண்ட நாள் வேண்டுகோளின் படி, அவரது வீட்டுக்குச் செல்கிறார் சஞ்சீவ். அவசர வேலையாக கேபிள் ஷங்கர் வெளியே செல்ல, தன்னந்தனியாக இருக்கும் சஞ்சீவ் பயத்தில் நடுங்குகிறார். கூப்பிடும் தூரத்தில் இருக்கும் தாத்தாவைப் பார்க்க மாமாவுடன் சென்ற போது, இளம்பெண்ணைப் பார்த்ததும் உற்சாகம் ஆகிறார். ஆனால், அப்படிப்பட்ட ஒரு பெண்ணே அங்கு இல்லை என்று மாமா போனில் சொன்னதும், சஞ்சீவுக்கு தூக்கிவாரிப் போடுகிறது. அன்றைய இரவை சஞ்சீவ் தனியாகக் கடக்க முடிந்ததா, நடந்தது என்ன? என்பதே அனாமிகா.

இஏவி சுரேஷ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சஞ்சீவ், கேபிள் ஷங்கர், தாத்தா செல்லத்துரை, காயத்ரி ஆகியோர் இயல்பாக தங்கள் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள். பேய் பயத்தில் இருக்கும் சஞ்சீவ் ஏன் சும்மா சும்மா தாத்தா வீட்டுக்கும், மாமா வீட்டுக்கும் ஓடிக்கொண்டே இருக்கிறார்?, பேய் பயத்தில் அலறும் சஞ்சீவ் எப்படி ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட வீடு என்று தெரிந்தும் தங்குகிறார் என்ற லாஜிக் கேள்விகள் இடிக்கின்றன.

சூப் பாய் சுப்பிரமணி

எந்தப் பெண்ணை நெருங்கினாலும் ஒரு பேய் வந்து தன்னை தொந்தரவு செய்கிறது. இதனால் காதலிக்காமல், கல்யாணம் ஆகாமல் இருக்கிறேன் என்று ஒரு சாமியாரிடம் சரண் அடைகிறார் விஷ்ணு. அவருக்கு நிகழும் பிரச்சினையை லைவ் ஆகப் பார்க்க ஆசைப்படும் சாமியார், ஒரு பெண்ணை போன் போட்டு அழைக்கிறார். உண்மையில் யார் அந்தப் பேய், ஏன் விஷ்ணுவை தொந்தரவு செய்கிறது என்பதை நகைச்சுவையாகச் சொல்லி இருக்கும் படம் சூப் பாய் சுப்பிரமணி.

லோகேஷ் ராஜேந்திரன் இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. ஆசிப் பிரியாணி இல்லாட்டியும் பசிக்கு அம்மா உணவகமாவது கிடைச்சா சரி உள்ளிட்ட சில இடங்களில் வரும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. முடிவு ஒன்லி காமெடி மேஜிக் ஆக உள்ளது.

சித்திரம் கொல்லுதடி

1939, 2013, 2016 என்று மூன்றுவித காலகட்டத்தில் நடக்கும் கதை. ஒரு சித்திரத்தை முழுமையாக வரைந்து முடிக்கும் எந்த ஓவியரும் உயிரோடு இருக்கமாட்டார். அதற்குக் காரணம் ஒரு அப்பாவிப் பெண்ணின் சபதமும், சத்தியமுமே காரணம். இது விதியா? சதியா? கட்டுக்கதையா? என்ன நடக்கிறது என்ற மர்மத்தை அவிழ்க்கிறது சித்திரம் கொல்லுதடி.

கதை, திரைக்கதை, தொழில்நுட்ப நேர்த்தி, கதாபாத்திரத் தேர்வு என அத்தனையிலும் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசனின் தேர்வு கச்சிதம். கோகிலாவுக்கான கதையில் சுவாரஸ்யமும், திகில் படத்துக்குரிய அம்சங்களும் அழகாக அணிவகுக்கின்றன. வினோத் பக்குவமான நடிப்பை வழங்கி முத்திரை பதிக்கிறார்.

குறும்படங்களின் தொகுப்பாக சில படங்கள் மலையாள சினிமாவிலும், தமிழ் சினிமாவிலும் வெளி வந்திருக்கின்றன. பேய் என்ற ஒற்றை ஒற்றுமையைக் கொண்டு அதே வகையிலான ஆறு படங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் ஆந்தாலஜி சினிமா என்கிற வகையில் 6 அத்தியாயம் தமிழ் சினிமாவில் வரவேற்கப்பட வேண்டிய நல் முயற்சி. ஆனால், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப ரீதியில் இது தொடரும், மிசை, அனாமிகா ஆகிய படங்கள் பின்னோக்கி இருக்கின்றன. அதற்கு பட்ஜெட்டும் ஒரு பெரிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.

சூப் பாய் சுப்பிரமணி படம் நகைச்சுவையில் கொஞ்சம் சிரிக்க வைத்து தப்பித்து விடுகிறது. சித்திரம் கொல்லுதடி மட்டுமே படத்துக்கான எல்லா அம்சங்களிலும் ஈர்க்கிறது. 6 படங்களுக்கான கிளைமாக்ஸை இறுதியில் சொல்லும் விதம் நல்ல யோசனைதான். அது ரசிகர்களுக்கான ஈடுபாட்டை வளர்த்தெடுக்க உதவும்தான். ஆனால், அந்த ஐடியா 6 படங்களுக்கும் தொடர்வது புத்திசாலித்தனமாக இல்லை. அதுவும் முன்கதைச் சுருக்கத்தை மறு நினைவூட்டும் ஃப்ளாஷ் கட்டில் கச்சிதத்தைக் கடைபிடித்திருக்கலாம். ஆனாலும், வழக்கமும், பழக்கமுமான ஃபார்முலாவில் இருக்கும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்வதில் 6 அத்தியாயம் மாற்று முயற்சி என்பதை மறுப்பதற்கில்லை.

கலிலியோ…இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15ம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார். இத்தாலியில் பிறந்து...

கலிலியோ…இன்றைய அறிவியல்
புரட்சிக்கு 15ம்
நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன
வானியலின் தந்தை எனக்
குறிப்பிடப்படுகின்றார். இத்தாலியில்
பிறந்து, சூரியக் குடும்பம் பற்றிய பல
உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர்.
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மானசீக
குருவான கலிலியோ பற்றிய
சுவாரஸியமான தகவல்கள் இதோ…
பெண்டுலம் கடிகாரத்தை உருவாக்க
பெரும்பாடுபட்டார் கலிலியோ.
ஆனால் அந்த ஆராய்ச்சியில்
அவருக்கு தோல்வியே கிடைத்தது.
ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள்
தான், பின்னாளில் வந்த இயற்பியல்
விஞ்ஞானிகளுக்கு வேத
பாடமாகியது.
இத்தாலியிலுள்ள பைசா நகர பல்கலைக்
கழகத்தில் கலிலியோவுக்கு கணித
பேராசிரியராக வேலை கிடைத்தது.
ஆனால் தனது ஆராய்ச்சிகளின்
காரணமாக மாணவர்கள் மீது கவனம்
செலுத்தாமல் இருந்ததால், அவர
பல்கலைக்
கழகத்திலிருந்து நீக்கி விட்டனர்.
கண்ணாடி பிம்பம் -
மெழுகுவர்த்தி மூலம் ஒலியைப்
பிரதிபலிக்கும் தொழில்நுட்பம்,
பாக்கெட்டில் வைக்கும் சீப்பு, ரீஃபில்
பேனா போன்ற
கண்டுபிடிப்புகளுக்கு கலிலியோவின்
ஆய்வுகள் தான் அடிப்படை ஆதாரம்.
தனது சூரிய மண்டலம் பற்றிய
கருத்துகளால் வாட்டிக்கான்
சிட்டி கத்தோலிக்க நிர்வாகத்தால்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடுமையான மன
உளைச்சலுக்கு ஆளான கலிலியோ,
1633ம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்க
உத்தவிடப்பட்டார். 1638ம்
ஆண்டு அவருக்கு இரு கண்களும்
பாதிக்கப்பட்டு, பார்வை இழந்தார். 1642ம்
ஆண்டு தனது வீட்டில் உயிரிழந்தார்.
கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த
பின், 1737ம் ஆண்டு அவரது உடலின்
எஞ்சிய பாகங்கள் அனைத்தும்,
கல்லறையிலிருந்து மீண்டும்
வெளியே எடுக்கப்பட்டு,
சாண்டா குரோஸ் தேவாலயத்தில்
அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில்
மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது ஆண்டன்
பிரான்செஸ்கோ என்பவர்
கலிலியோவின்
வலது கை நடுவிரலை எடுத்து
பத்திரப்படுத்தினார். அந்த விரல்
தற்போது பதப்படுத்தப்பட்டு,
இத்தாலியின் புளோரன்ஸ்
அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடப்பதாக அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பீதி கிளப்பியுள்ளனர்.   ராஜஸ்தான் மாநிலத்...

ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடப்பதாக அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பீதி கிளப்பியுள்ளனர்.  

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இந்தாண்டு அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் பா.ஜ.க அரசு மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் `பேய்’ பயத்தில் உறைந்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் பின்வருமாறு... ராஜஸ்தான் சட்டப்பேரவையின் கூட்டங்களில் 200 சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. எம்.எல்.ஏ இறப்பு, எம்.எல்.ஏ-க்கள் மீது போலீஸ் வழக்கு என அபசகுணமான காரணங்களால் சட்டப்பேரவையில் முழு வருகைப்பதிவு இருப்பதே கிடையாது.

ராஜஸ்தான் மண்டேல்கர் தொகுதி எம்.எல்.ஏ கீர்த்தி குமாரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார். நத்வாரா எம்.எம்.ஏ கல்யாண் சிங் உடல்நலக்குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தார். இதுபோல் எம்.எம்.ஏ-க்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அவர்களிடையே பயத்தை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் மூன்று பேர் கொலை மற்றும் பாலியல் வழக்குகளில் சிறைக்குச் சென்றுவிட்டனர். இதனால் ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் தீய சக்திகள் நடமாடுவதாகவும் யாகம் நடத்தி பேய்களைத் துரத்த வேண்டும் என்றும் எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் வசுந்தரா ராஜேவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனராம்.

இதுபற்றி நகவூர் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ ஹபிபூர் ரஹ்மான் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,  `ராஜஸ்தானின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள இடம் ஒருகாலத்தில் இடுகாடாக இருந்தது. எனவே, அங்கு பேய் நடமாட்டம் இருக்க வாய்ப்புள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து தீய சக்திகள் விரட்டப்பட வேண்டும். முதல்வர் வசுந்தரா ராஜே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு மூன்று படங்களில் கமிட்டானார். ஏற்கனவே வேலைக்காரன் வெளியாகிவிட்டது. அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா ...

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு மூன்று படங்களில் கமிட்டானார். ஏற்கனவே வேலைக்காரன் வெளியாகிவிட்டது. அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து அவர் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டானார். இப்படத்திற்கு ரஹ்மான் இசைமைக்க, ராகுல் பிரீத் சிங் ஜோடியாகிறார்.

தற்போது இப்படத்தில் வேற்றுகிரகவாசிகளான ஏலியன்கள் பூமியை அழிக்க வருகிறார்கள். அவர்களிடமிருந்து மக்கள் எப்படி தங்களை காத்துக்கொள்கிறார்கள் என்ற சிறப்பம்சம் இடம்பெற்றிருக்குமாம்.

மேலும் கதையில் ஒரு புதுவடிவம் இருப்பதோடு படத்தின் சில கிராஃபிக்ஸ் காட்சிகளை அமெரிக்காவில் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். ஹாலிவுட் படம் போல இருக்கும் என்கிறார்கள்.

இந்த ஞாயிற்றுக்கிழமை ஜியோ யூஸர்களுக்கு கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்திருக்கும், குறிப்பாக ட்விட்டரில் ஆக்டிவாக இருந்தவர்களுக்கு. ஜியோ பயனர...

இந்த ஞாயிற்றுக்கிழமை ஜியோ யூஸர்களுக்கு கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்திருக்கும், குறிப்பாக ட்விட்டரில் ஆக்டிவாக இருந்தவர்களுக்கு.

ஜியோ பயனர்களின் தகவல்கள் ஒரு இணையதளத்தில் லீக் ஆகிவிட்டதாக சிலர் ட்வீட் செய்தனர். அந்த லிங்க்கில் இருந்த இணையதளத்தில் ஜியோ பயனர்களின் எண்களுக்கு நேராக அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் இருந்தன. யூஸர்களின் பிறந்த நாள், மொபைல் எண்கள், ஜியோ வாங்கியபோது கொடுக்கப்பட்ட மற்ற எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் எண் வரை  அனைத்துத் தகவல்களையும் அந்த இணையதளம் பட்டியிலிட்டது. இதைத் தொடர்ந்து, ஜியோவின் டேட்டாபேஸ் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக செய்திகள் பரவின. ட்விட்டரில் ஜியோவின் வாடிக்கையாளர் சேவை ஹேண்டிலை மென்ஷன் செய்து “என்ன ஆச்சு” என கேள்விகள் வேகமாக குவிந்தன.

    Is that true jio get hack @reliancejio @JioCare
    — Asutosh Patel (@asutosh407) July 9, 2017

பல கேட்ஜெட்ஸ் இணையதளங்கள் உடனடியாக அந்த இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் உண்மைதானா என்ற சோதனையில்  இறங்கின. சில சமயம், பொய்யான தகவல்களை பட்டியிலிட்டுவிட்டு, “உங்கள் மொபைல் எண்ணை எண்டர் செய்து சோதனைச் செய்யவும்” என வலை விரிப்பார்கள். நாமும், பாதுகாப்பு கருதி நமது தகவல்களை கொடுத்து செக் செய்வோம். இறுதியில், அவர்கள் சொன்ன தகவல்கள் தவறாக இருக்கும். ஆனால், நம்மிடம் இருந்து உண்மையானத் தகவல்களை அப்போது வாங்கியிருப்பார்கள். (ருத்ரா படம் பார்த்தவர்களுக்கு பாக்யராஜ் செய்யும் அந்த திட்டம் நினைவுக்கு வரலாம்)  ஜியோ ஹேக் என்பதும் அது போன்ற ஒரு திட்டமாக இருக்கலாம் என ட்விட்டரில் சிலர் குறிப்பிட்டார்கள். ஆனால், இந்த இணையதளம் சொன்னத் தகவல்கள் அனைத்தும் சரியாக இருந்திருக்கின்றன.

ஜியோவின் மொத்த டேட்டாபேஸும் இவர்கள் கைக்கு கிடைக்கவில்லை. பல பயனர்கள் தங்கள் எண்ணைத் தேடிப் பார்த்து ‘அதில் இல்லை’ என ட்வீட் செய்திருந்தார்கள். ஆனால், 70% பயனர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி மொபைல் ஆப்ஸ் டெவலப்பர் பாலாஜியிடம் கேட்டபோது ”ஜியோவின் டேட்டாபேஸை அவ்வளவு எளிதில் ஹேக் செய்திருக்க முடியாது. லீக் ஆகியிருக்கலாம். அல்லது, ஜியோவின் ஆப்ஸ் எதன் மூலமாவது இந்தத் தகவல்களை திருடியிருக்கலாம். ஜீயோ ஆப்ஸ், தேர்ட் பார்ட்டி சேவைகளை அனுமதிக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்” என்றார்.

இந்தத் தகவல்களை எடுப்பதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வியை முன் வைத்தோம்.

“சில ஹேக்கர்கள் தங்கள் ‘திறமையை’ நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் காட்டுவதற்காக செய்வார்கள். முக்கியமான தகவல்கள் கிடைத்தால், அதை விற்கலாம். நம் மொபைல் எண்களை பணம் கொடுத்து வாங்க பல டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. அதற்காக ஹேக் செய்யலாம்” என்றார் பாலாஜி.

ஜியோ யூஸர்களின் தகவல்களை வெளியிட்ட இணையதளம் மும்பையில் இருந்து செயல்பட்டிருக்கிறது. இப்போது அந்த இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது.


இது பற்றி ஜியோவின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜியோவின் டேட்டா எதுவும் ஹேக் ஆகவில்லை. இந்த இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் தவறானவை. அதனால், ஜியோ யூஸர்கள் யாரும் கவலைக்கொள்ளத் தேவையில்லை. இது பற்றிய விசாரணை நடந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என சொல்லியிருக்கிறார்.

ஜியோ எண்ணுடன் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதை விட முக்கியமாக நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்க வேண்டும். ஒருவேளை, தகவல்கள் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அதை பயனர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மூடி மறைப்பது மேலும் பல குழப்பங்களுக்குத்தான் வித்திடும்.