இன்று (ஜூலை 02, 2019) வேல்ஸ் உயர் நீதிமன்ற விசாரணைக்குச் செல்கிறார் (Vijay Mallya) விஜய் மல்லையா. விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு ...
இன்று (ஜூலை 02, 2019) வேல்ஸ் உயர் நீதிமன்ற விசாரணைக்குச் செல்கிறார் (Vijay Mallya) விஜய் மல்லையா. விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசிடம் சட்ட ரீதியாக பேசிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு தரப்பு.
இந்திய அரசு தரப்பின் விண்ணப்பத்தை எதிர்த்து, (Vijay Mallya) விஜய் மல்லையாவும் தன்னால் முடிந்த வரை அனைத்து சட்ட வழிகளையும் ஒவ்வொன்றாக பிரயோகித்துக் கொண்டிருக்கிறார்.
அப்படித் தான் இந்த வேல்ஸ் உயர் நீதிமன்ற (Oral Hearing) வாய் வழி விசாரணையும் இன்று நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் ஒரு கட்டுரையில், மல்லையா தப்பிக்க இருக்கும் நான்கு சட்ட வழிகளைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள்.
உள் துறை உத்தரவு
ஆக மல்லையாவுக்கு நடக்கும் இந்த வாய்வழி விசாரணையில் வென்றால் என்ன செய்ய வாய்ப்பிருக்கிறது, தோற்றால் என்ன செய்ய வாய்ப்பிருக்கிறது என விரிவாகப் பார்ப்போம். மல்லையா வழக்கில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின், இங்கிலாந்தின் உள் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி 04, 2019 அன்றே, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல, இந்திய அரசுக்கு அனுமதி கொடுத்து விட்டது.
வாய் வழி விசாரணை (Oral Hearing)
அந்த உத்தரவை எதிர்த்து தான், இப்போது வேல்ஸ் உயர் நீதி மன்றத்தில் முறையிட்டு வாய் வழி விசாரணைக்கு (Oral hearing) சென்று கொண்டிருக்கிறார் (Vijay Mallya) விஜய் மல்லையா. இந்த மேல் முறையீட்டைக் குறித்து பேசிய இந்திய தரப்பினர் "விஜய் மல்லையாவை நாடு கடத்துவது குறித்த வாதங்களைக் கேட்க (Oral Hearing), வேல்ஸ் நீதிமன்றம் ஒரு நாள் ஒதுக்கி இருக்கிறது."
தீர்ப்பு
மேலும் "விசாரணை ஒரு நாளுக்குள்ளேயே முடிந்து விட்டால், இன்றைக்கே தீர்ப்பும் வந்துவிடும். அப்படி இல்லை என்றால் வாதங்கள் மட்டும் இன்று கேட்டு விட்டு, தீர்ப்பை மட்டும் மற்றொரு நாளுக்கு ஒத்தி வைப்பார்கள். இந்த விசாரணை நீதிபதி லெகாத் (Justice Leggatt) மற்றும் நீதிபதி பாப்பல்வெல் (Justice Popplewell) முன் நடக்கப் போகிறது" என முன் கூட்டியே சொல்கிறார்கள் (Vijay Mallya) விஜய் மல்லையாவை எதிர்த்து, இந்திய அரசு தரப்பில் வாதாடிக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள்.
மேல் முறையீடு
ஒருவேளை இதுவரையான வழக்கு விசாரணைகளில், ஏதாவது சில சாட்சியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விசாரிக்கப்பட்டிருந்தால் மற்றொரு மேல் முறையீடு (Appeal) கொடுக்கப்படலாம் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். இன்று (Vijay Mallya) விஜய் மல்லையாவின் வழக்கை (appeal)மேல் முறையீடாகக் கருதாமல், வெறும் ஒரு நாள் (Oral Hearing) வாய் வழி விசாரணையாகத் தான் எடுத்துக் கொண்டிருக்கிறது வேல்ஸ் நீதிமன்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு 1
அப்படி இந்த வாய் வழி விசாரணை (Vijay Mallya) விஜய் மல்லையாவுக்கு சாதகமாக தீர்ப்பானால், மீண்டும் வழக்கம் போல உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கு நடைபெறும். அப்படி இல்லை என்றால் இது தான் (Vijay Mallya) விஜய் மல்லையாவின் கடைசி சட்ட வாய்ப்பாக இருக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
வாய்ப்பு 2
ஒருவேளை இந்த வாய்வழி விசாரணையும் (Vijay Mallya) விஜய் மல்லையாவுக்கு எதிராக வந்தால், இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தை நாடலாமாம். பொதுவாக இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை விசாரிக்க எடுத்துக் கொள்வார்களாம். ஆக விஜய் மல்லையாவின் வழக்கையும் ஒரு பொது நல வழக்காக கருதி இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
வாய்ப்பு 3
அது போக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தையும், (Vijay Mallya) விஜய் மல்லையா தப்பிக்கும் வழிகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். காரணம், இங்கிலாந்து இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அதாவது பிரெக்ஸிட் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆகையால் இன்னமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்கும் இங்கிலாந்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்துக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டி இருக்கும் என்கிறார்கள்.
வாய்ப்பு 4
Representation என ஒரு வழி இருக்கிறதாம். இதையும் (Vijay Mallya) விஜய் மல்லையா பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறதாம். இந்தியாவில் 1993 சூரத் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட டைகர் ஹனீஃப் என்பவர் சட்ட ரீதியாக எல்லாவற்றிலும் தோற்ற பிறகு, இந்த Representation முறையைப் பயன்படுத்தி இருக்கிறார். இன்று வரை டைகர் ஹனீஃப் விவகாரத்தில் முடிவு செய்யாமல் காத்திருக்கிறது இங்கிலாந்து உள் துறை அமைச்சகம். அதே போல மல்லையாவும் புதிய ஆதாரங்களைச் சமர்பித்து Representation கோர வாய்ப்பிருக்கிறதாம். கோரினால் டைகர் ஹனீர் போல மல்லையாவுக்கு இந்திய அரசு காத்திருக்க வேண்டி இருக்கும் என்கிற டைகர் ஹனீஃபின் Representation.
ஆக இத்தனை கெடுபிடிகளுக்குப் பின்னும் மல்லையா தப்பிக்க கொஞ்சம் வழி இருப்பது போலத் தான் தெரிகிறது. (Vijay Mallya) விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து வட்டியும் முதலுமாக கடனை வசூலித்தால் சரி.
நடிகர் விஜய் சேதுபதி புகழ் ஏற ஏற ஆளே மாறிவிட்டார். அவரின் தன்னடக்கம் இப்போது புள்ளி அளவில் கூட இல்லை. என்னவோ உச்ச நடிகர் என்கிற கனவில் மிதக...
நடிகர் விஜய் சேதுபதி புகழ் ஏற ஏற ஆளே மாறிவிட்டார். அவரின் தன்னடக்கம் இப்போது புள்ளி அளவில் கூட இல்லை. என்னவோ உச்ச நடிகர் என்கிற கனவில் மிதக்கிறார் என்று இன்டஸ்ட்ரியில் பேசிக்கறாங்க.
அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சிந்துபாத் படம் பல ஊர்களில் சனிக்கிழமை காலைக் காட்சிகள்தான் வெளியானதாம். அதுவும் கூட கூட்டமில்லாமல் காற்று ஓடியதால்தான் என்றும் கூறுகிறார்கள்.
இவர் கதை இப்படி இருக்க, ஏற்கனவே இரண்டு படப்பிடிப்புக்களில் இருக்கும் விஜய் சேதுபதி, ஒரு தயாரியப்பாளரிடம் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்க பேசி இருக்காராம்.
சச்சின் டெண்டுல்கர் கால்ஷீட்டா
அந்த தயாரிப்பாளரை சந்திச்சு, கிரிக்கெட் விளையாட்டை மையமா வச்சு ஒரு படம் எடுக்க கதை தயாரா இருக்கு. 30 கோடி ரூபாய் பட்ஜெட்.கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கால்ஷீட் ரெண்டு அல்லது மூணு நாட்களுக்கு கேளுங்கன்னு சொல்லி இருக்காராம். முப்பது கோடி ரூபாய் பட்ஜெட்டில் சச்சின் கால்ஷீட்டுமான்னு தயாரிப்பாளர் மயங்கி விழாத குறைதான்.
விஜய சேதுபதி எதுக்கு
ஏன், எதுக்காக விஜய் சேதுபதி இப்படி மாறிட்டார். அதிகப் படங்கள் நடிச்சு எண்ணிக்கையை கூட்டணும்னு இந்த வேலை செய்யறாரா... இல்லை உண்மையிலேயே மனுஷனுக்கு நாட்டு நடப்பு தெரியலையான்னு அவரை சுத்தி உள்ளவங்க குழம்பிப் போயி இருக்காங்களாம். அதுவும், இவரை வச்சு படம் எடுத்து நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர், ஒரு படம் பண்ணிகுடுங்கன்னு கேட்டதன் விளைவுதான் இதுன்னு சொல்றாங்க.
பணத்துக்காக நடிக்க வந்து
பிகாம் படிச்சு இருக்கும் விஜய் சேதுபதி, எங்கெல்லாமோ வேலை பார்த்துட்டு, கடைசியாத்தான் சினிமாவில் நடிச்சா நல்லா பணம் சம்பாதிக்கலாம்னு இந்த பக்கம் வந்தவர். சின்னத் திரை, குறும் படம் திரைப்படம்னு இப்போ நினைச்சபடி பெரிய ஆளாயிட்டார்.பணமும் கை நிறைய சம்பாதிக்கிறார்.
தயாரிப்பாளர் கஷ்டத்தில்
நம்மால் நஷ்டப்பட்ட தயாரிப்பாளர், நஷ்டத்தை சரிக்கட்ட ஒரு படம் பண்ணித் தாங்கன்னு கேட்கறப்போ, அவர்கிட்டே போயி முப்பது கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுங்கன்னு சொன்னதும் தப்பு. அதோட சச்சின் கால்ஷீட் ரெண்டு மூணு நாளைக்கு கேளுங்க படத்தை நல்லா எடுக்கலாம்னு சொன்னதும் எவ்ளோ பெரிய தப்பு. சச்சின் கால்ஷீட் வாங்குவது என்பது அவ்வளவு எளிதானதா?
இவ்வளவு சின்ன பிள்ளைத் தனமாவா விஜய் சேதுபதி இருப்பார்...!
நடிகர் விஜய்யின் ஐடி கார்டு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த...
நடிகர் விஜய்யின் ஐடி கார்டு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், படத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஐடி கார்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் விஜய் புகைப்படத்துடன் மைக்கேல் என்ற பெயரும், தலைமை பயிற்சியாளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஜான் எட்வர்ட் வார்னாக்கும் அவரது ஆராய்ச்சிக் குழுவினரும் கண்டுபிடித்துதான் இன்டெர்பிரஸ் என்ற கணினி மொழி. அதன் மூலம் உருவாக்கப்படும் கட்டளைக...
ஜான் எட்வர்ட் வார்னாக்கும் அவரது ஆராய்ச்சிக் குழுவினரும் கண்டுபிடித்துதான் இன்டெர்பிரஸ் என்ற கணினி மொழி. அதன் மூலம் உருவாக்கப்படும் கட்டளைகளால் பிரின்ட்டிங் நுட்பத்தை கட்டுப்படுத்தி மெருகேற்ற முடியும் என்று கூறிப் பார்த்தார். ஜெராக்ஸ் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. நண்பர் சார்லஸ் கெஸ்கேவுடன் வேலையை விட்டு, வெளியேறி அடோப் சிஸ்டம் என்ற நிறுவனத்தை உருவாக்குகிறார்
பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் கணினி செய்த புரட்சி அளப்பரியது. செய்திகளை எழுத்து அச்சுக்களாக கோத்துக்கொண்டு படங்களை அச்சுப்பிரதி எடுப்பதெல்லாம் மிகக் கடினமான, நிறைய மனித உழைப்புகளை கோரும் வேலை. ஒரு சிறு பிழை என்றாலும் திருத்துவது மிக கடினம். இந்த ஸ்டார்ட்அப் உருவாகும் வரை இப்படிதான் சென்று கொண்டிருந்தது அச்சு ஊடகம். அதன் பின் நடந்ததெல்லாம் அசுரத்தனமான மேஜிக்.
அச்சு ஊடகத்தின் கதையையே மாற்றி அமைத்தவர்கள் ஜான் எட்வர்ட் வார்னாக் (John Edward Warnock) மற்றும் சார்லஸ் கெஸ்கே (Charles Geschke). இவர்கள் இருவரும் புகழ்பெற்ற ’ஜெராக்ஸ்’ நிறுவனத்தின் பாலோ ஆல்டோ ரிசர்ச் சென்டரில் ஒன்றாக வேலை பார்த்த விஞ்ஞானிகள்.
வார்னாக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கணித பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்தத் தோல்வியில், அவரை வேறு பள்ளிக்கு மாற்ற வைத்தது. தோல்வி கொடுத்த வலி, பள்ளிப் படிப்பு படித்தபின்னும் கணிதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றும் தீராமல் அதன்பிறகு எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் Ph.D முனைவர் பட்டம் பெறும்வரை தொடர்ந்தது.
படித்து முடித்ததும் சுதர்லாண்ட் நிறுவனத்தில் கொஞ்சகாலமும் அதன் பிறகு ஜெராக்ஸ் நிறுவனத்தில் கொஞ்சகாலமும் வேலைப் பார்த்தார்.
இவருடைய பல கண்டிபிடுப்புகளை ஜெராக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரும் அவரது ஆராய்ச்சிக் குழுவினரும் கண்டுபிடித்துதான் இன்டெர்பிரஸ் என்ற கணினி மொழி. அதன் மூலம் உருவாக்கப்படும் கட்டளைகளால் பிரின்ட்டிங் நுட்பத்தை கட்டுப்படுத்தி மெருகேற்ற முடியும் என்று கூறிப் பார்த்தார். ஜெராக்ஸ் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. நண்பர் சார்லஸ் கெஸ்கேவுடன் வேலையை விட்டு, வெளியேறி அடோப் சிஸ்டம் என்ற நிறுவனத்தை உருவாக்குகிறார்.
வார்னாக்கின் மனைவி மார்வா வார்னாக் ஒரு கிராஃபிக்ஸ் டிசைனர். அவருடைய ஆதரவும் இருந்ததால் அவர்களின் கார் நிறுத்தும் கேரேஜ்ஜில் ஸ்டார்ட்அப்பை ஆரம்பித்தார்கள். அவர்கள் வீட்டிற்கு பின்புறமாக அடோப் என்ற ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. அதன் பெயரையே தங்கள் ஸ்டார்ட்அப்பிற்கும் வைத்தார்கள்.
அடோபின் லோகோவை வடிவமைத்தவர் மார்வா வார்னாக் தான். வார்னாக்கும் கெஸ்கேவும் ஜெராக்ஸ் வேண்டாம் என்று தூக்கி எறிந்த இன்டெர்பிரஸ் என்ற பிரிண்டிங் மொழியை புதுபித்து மெருகேற்றினார்கள். அதற்கு போஸ்ட்ஸ்கிரிப்ட் என்று பெயர் வைத்து வெளியிட்டார்கள். அது தான் முதன்முதலில் சர்வதேச தரத்தில் வெளிவந்த பிரிண்டிங் கணினி மொழி. அது ஆங்கிலம் மட்டுமல்லாது பிற மொழிகளுக்கும் ஏற்ற வகையில் இருந்தது.
இவர்களின் இந்த மொழி நானூறுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உருவாக காரணமாக இருந்தது. இருபதிற்கும் மேற்பட்ட பிரிண்டர் நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருளை வடிவமைக்க உதவியது.
இதன்பின் தான் எழுத்துருவில்(Fonts) புதிய மாற்றங்கள் வந்தன. அதுவரை இரண்டே இரண்டு எழுத்துருக்கள் மட்டுமே இருந்த நிலையை மாற்றி எண்ணற்ற எழுத்துருக்கள் பல மொழிகளில் உருவாக ஆரம்பித்தன. அதற்கு மூலகர்த்தாவாக அடோப் சிஸ்டம்ஸ்ஸின் போஸ்ட்ஸ்கிரிப்ட் இருந்தது. அதன்பிறகே ஆப்பிள் நிறுவனமும், மைக்ரோசாப்ட் நிறுவனமும் எழுத்துரு உருவாக்கத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன.
போஸ்ட்ஸ்கிரிப்ட்டின் உதவியால் இவர்களே உருவாக்கிய மென்பொருள் இல்லஸ்ட்ரேட்டரை உபயோகித்து பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல எவர் வேண்டுமென்றாலும் எழுத்துருக்களை உருவாக்கலாம் என்ற நிலை வந்தது. அடோபின் மகத்தான் சாதனை அது.
இந்தக் காலகட்டத்தில் தான் தாமஸ் நோல் மற்றும் ஜான் நோல் சகோதரர்கள் இவர்களிடம் வந்து ஒரு ராஷ்டர் வகை கிராபிக்ஸ் மென்பொருளை டெமோ கொடுக்கிறார்கள். அதுவரை இல்லாத புது மாதிரியாக இருக்கிறது அந்த மென்பொருள். அவர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கிறார்கள். அங்கும் ஸ்டீவ்ஜாப்ஸ் முன்னிலையில் டெமோ கொடுக்கிறார்கள். அவருக்குப் புரிந்துவிட்டது வருங்கால கிராபிக்ஸ் யுகத்தின் அடிநாதமே இந்த மென்பொருள் தான் என்று.
உடனே இரு நிறுவனங்களும் அவர்களுடன் ஒப்பந்தம் போடுகின்றன. அடோப் அந்த மென்பொருளை வாங்கி மேம்படுத்தி வெளியிடப்போகிறது. அதிலும் ஆப்பிள் கணினியில் மட்டுமே வரப்போகிறது. அது தான் போட்டோஷாப். வெளியிட்ட சில நாள்களிலே அது மிகப் பெரிய ஹிட்.
இந்த ஒரு மென்பொருளை வைத்தே அந்நாளில் மில்லியன் டாலர்கள் சம்பாதித்த நிறுவனங்கள் பல. கிராபிக்ஸ் வேலைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 400 டாலர்கள் விலை வைத்த காலம் அது. பத்திரிகைகள் புதுமையான அட்டைப்படங்களுடன் வந்தன. விளம்பரங்கள் கற்பனையின் உச்சம் தொட்டன. புகைப்படங்களின் அழகு மேம்படுத்தப்பட்டதோடு புகைப்பட பிழைகள் எளிதில் சரிசெய்யப்பட்டன.
அடோப் நிறுவனத்தின் பெயர் பட்டிதொட்டி எங்கும் சேர அவர்களின் போட்டோஷாப் மென்பொருள் வெகுவாக பயன்பட்டது. நிறுவனத்தின் பங்கும் பல மடங்கு ஏறத் தொடங்கியது. இந்த காலக்கட்டத்தில் இவர்களுக்கு இணையாக மேக்ரோமீடியா என்ற நிறுவனம் மிக வலிமையாக போட்டி போட்டது.
மேக்ரோமீடியா அடோப்பை விட பல கிராபிக்ஸ் மற்றும் இணைய மென்பொருள்களை கொண்டுவந்தது. இணையப் பொருளாதார வடிவம் எடுக்கும்போது மிகவிரைவிலும், புதுமையாகவும் வடிவமைக்க பயன்படுத்தபட்டவை தான் Dreamweaver, Flash, Fireworks எல்லாம்.
போட்டியாளர்களை நல்ல விலைக்கொடுத்து வளைத்துக்கொள்வதே கார்ப்பரேட் உலகின் தாரகமந்திரம். அதன்படி அடோப், ட்ரீம்வீவரை விலைக்கு வாங்கியது. இந்த இணைப்பு பிரிண்டிங் மற்றும் இணைய மென்பொருள் உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக அடோபை மாற்றியது. அது இன்றுவரை தொடர்கிறது.
இவர்களின் மென்பொருள் இல்லாத கணினியே இல்லை. பயன்படுத்தாக மனிதர்களே இல்லை; நிறுவனங்களே இல்லை என்பதை இன்னொரு குட்டி டாகுமென்ட் வகை துணை மென்பொருள் உறுதிசெய்தது. அது தான் PDF File. இதன் வடிவமைப்பில் வார்னாக்கின் பங்கு அதிகம். அவர் உருவாக்கிய கேம்லாட் என்ற மென்பொருள் தான் பின்னர் PDF ஆக உருவாகியது. இன்று இது ஒரு சர்வதேச தர உறுதிபாடு கொண்ட பார்மெட். எல்லா அரசாங்க கோப்புகளிலும் கூட இதைப் பயன்படுத்துகிறார்கள்.
அடோப் அதோடு நிற்கவில்லை. வீடியோ எடிட்டிங், கிராபிக்ஸ் போன்றவற்றுக்காகவும் அடோப் பிரீமியர், ஆப்டர்-எப்பெக்ட் போன்ற மென்பொருள்களை கொண்டுவந்தார்கள். இவை வந்த பிறகே கல்யாண வீடுகளில் புதுக் கலாசாரம் உருவாகியது. வீடியோ எடுக்கும் போதே கிராபிக்ஸ் செய்து மாப்பிள்ளை பொண்ணுக்கு இதயம் வரைந்து அம்புவிட்டார்கள். மணமேடையில் இருக்கும் போதே வீடியோவில் சுவிட்சர்லாந்துக்கு பறக்கவிட்டார்கள்.
எண்ணற்ற, புதுமையான பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியதும் இவர்களின் தயாரிப்புகளே. ஒரு புள்ளிவிவரத்தின் படி மூன்று கோடி வேலைவாய்ப்புகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இவர்களின் தயாரிப்புகள் உதவிக் கொண்டிருக்கிறன. இது ஒரு சாதனை.
வருடம் தோறும் ஆறாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் பெரும் நிறுவனமாக, தவிர்க்க இயலாத நிறுவனமாக இது வளர்ந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக, தலைமை செயல் அதிகாரியாக, சேர்மனாக இருப்பவர் சாந்தனு நாராயண் என்ற இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட்அப் பாடம்
ஜெராக்ஸ் நிறுவனம் மட்டும் வார்னாக்கின் பேச்சை கேட்டிருந்தால் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் மென்பொருள் மற்றும் வன்பொருள் கொண்ட அசைக்கமுடியாத, வலிமையான இடத்தை அடைந்திருக்கும். இன்று ஜெராக்ஸ்சும் பெரிய நிறுவனம் என்றாலும் தவிர்க்க இயலாத நிறுவனம் என சொல்லமுடியாது. வார்னாக் தன் படைப்பின் மீது கொண்டிருந்த அசாத்திய நம்பிக்கை தான் தன் கண்டுபிடிப்பை நிராகரித்த வேலையை தூக்கி எறிந்துவிட்டு புதிய நிறுவனத்தை தொடங்க வைத்தது.
தோல்வியும் நிராகரிப்பும் தடைகற்கள் அல்ல. புதிய பாதையை காட்டும் திசைகாட்டி. அதை புரிந்துகொண்டவர் அந்த புதிய திசையில் பயணம் செய்து வெற்றி காண்கிறார்கள். சிலர் திரும்பி செல்கிறார்கள். சிலர் அந்த இடத்திலேயே அழுதுகொண்டே காலத்தை கழிக்கிறார்கள். இதில் நீங்கள் யார் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் பிரியாணி சாப்பிடலாமா அல்லது சாப்பிட்டால் என்னவாகும் என்பது குறித்து இங்கு காண்போம். அனைத்து தரப்பு அசைவ உணவு பிரியர்க...
சர்க்கரை நோயாளிகள் பிரியாணி சாப்பிடலாமா அல்லது சாப்பிட்டால் என்னவாகும் என்பது குறித்து இங்கு காண்போம்.
அனைத்து தரப்பு அசைவ உணவு பிரியர்களுக்கும் பிரதானமான உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியில் சிக்கன், மட்டன், இறால், பீஃப், காடை, மீன், முட்டை என பல வகைகள் உள்ளன.
இவற்றில் பெரும்பாலானோர்களின் முதல் தேர்வு சிக்கன் பிரியாணி தான். ஏனெனில், இதன் சுவை மற்றும் குறைவான விலையும் தான் இதற்கு காரணம்.
சிக்கன் பிரியாணி
ஆனால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததா என்றால் சரி என்பது தான் பதிலாகும். சிக்கன் பிரியாணி பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
கலோரிகள் 739.46 அளவும், புரதசத்து 28.89 கிராமும், சோடியம் 1190.58 மில்லி கிராம், பொட்டாசியம் 507.99 மில்லி கிராமும், இரும்புச்சத்து 2.58 மில்லி கிராமும், கால்சியம் 44.37 மில்லி கிராமும், ஜின்க் 2.75 மில்லி கிராமும், நிறையுற்ற கொழுப்புகள் 5.95 கிராமும், கொழுப்புகள் 32.64 கிராமும் சிக்கன் பிரியாணியில் சத்துகள் நிறைந்துள்ளன.
சர்க்கரை நோயாளிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதில் மிகுந்த கவனம் கொள்வதும் அவசியம். முதலில் அந்த பிரியாணி நாட்டுக்கோழி கொண்டு செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அது நன்கு வேக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த பிரியாணியை அளவாக தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டும். சிக்கனில் உள்ள செலினியம் உடலுக்கு நன்மைதான். எனினும் அளவாகவே இந்த பிரியாணியை சாப்பிட வேண்டும்.
எண்ணெய்யை குறைந்த அளவு உபயோகித்து இதனை சமைத்து சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. கொலெஸ்ட்ரால் குறைவான எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
இந்த பிரியாணியை பழுப்பு பாஸ்மதி அரிசியைக் கொண்டே தயார் செய்ய வேண்டும். இதுதான் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்கும். பிரியாணி சாப்பிட்டதும் ஒரு மூலிகை டீ குடிக்கலாம்.
மட்டன் பிரியாணி
சிக்கனை விட மட்டன் பிரியாணி இன்னும் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாகும். ஏனெனில் இதில் வைட்டமின் பி12, ரோபோபிளவின், பாஸ்பரஸ், ஜின்க், இரும்புச்சத்து போன்றவை உள்ளன.
எனவே, இதனை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை குறைந்த அளவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. எனினும், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை இதற்கு பயன்படுத்த வேண்டும். மேலும் செரிமானம் ஆகக்கூடிய மசாலா பொருட்களையும் இதில் பயன்படுத்த வேண்டும். அத்துடன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நல்லது.
அன்றாட சமையலில் வெங்காயம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. வெங்காயத்தை வளையமாக வெட்டி உங்கள் கால்கள...
அன்றாட சமையலில் வெங்காயம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
வெங்காயத்தை வளையமாக வெட்டி உங்கள் கால்களில் இரவு முழுவதும் வைப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்பதை இங்கே படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
எப்படி உபயோகிப்பது
வெங்காயத்தை வளையமாக வெட்டி அதன் பாதத்தின் நடுவில் வைத்து அதற்கு மேல் சாக்ஸ் ஒன்று இரவு முழுவதும் போட்டுவிடுங்கள்.
பயன்கள்
நச்சுகளை உரிஞ்சிவிடும், இரத்ததை சுத்தம் செய்யும், நுண்ணுயிர்கள் மற்றும் பாக்டீரியாவை அண்ட விடாது. கால்களில் இருந்து வரும் துற்நாற்றம் நீங்கும்.
காய்ச்சல் சரியாகும்.
அக்குபஞ்சர் பாயிண்ட்களை தூண்டும்.
கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்...
கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும். அதை சிறுவயதில் நாம் எடுக்கும்பாழுது, விஷம் அதைத் தொடக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லியிருப்பார்கள்.
புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்கான நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அது நம்முடைய வீட்டில் வேறு என்னென்ன மாதிரயான விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு... இனியாவது தெரிஞ்சிக்கோங்க... அதை தூக்கி கீழே வீசிடாதங்க...
சமையலறையில்
பொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும். ஆம்.
நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும்.
மொபைல் நீரில் விழுந்தால்
செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான். அதுதாங்க... செல்போனை தண்ணிக்குள்ள போட்றது.
நாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான புானை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் ஜார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது.
ஆவணங்கள்
வீட்டில் இருக்கின்ற முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள் போன்றவை வீணாகிப் போய்விடாமல் செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க வேண்டுமென்றால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பெட்டியிலோ பையிலோ போட்டு வைத்திருங்கள்.
துணிகள் காயவைக்க
நாம் துவைத்து முடித்த ஈரமான துண்டோ அல்லது மற்ற துணி வகைகளோ உடனடியாக உலர்த்த வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த சிலிக்கான் ஜெல் பெரிதும் உதவிசெய்யும்.
ஒரு பக்கெட்டில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு துணிகளைப் போட்டு அதில் ஊறவைத்தால் போதும் துணிகள் உடனடியாக காய்ந்துவிடும்.
கத்தி கூர்மையாக
பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.
துர்நாற்றம்
எப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் புதுசுபோலவே பளபளக்கும்.
வளர்ப்பு பிராணிகள்
நம்முடைய வீடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு பிஸ்கட்டுகள் மற்றும் வேறு சில உணவுகளை கவர்களில் வைத்திருப்போம். அவற்றை நம்முடைய உணவைப் போல சுகாதாரமாக வைத்திருக்க முயந்சி செய்வதில்லை. அதனால் வேகமாகக் கெட்டுப்போய்விடும். அதை தவிர்க்க வேண்டுமென்றால் அந்த உணவு கவர்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வையுங்கள்.
நகைகள்
பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும்.
அலங்காரப் பொருட்கள்
வீட்டில் சில முக்கிய தினங்களன்று மட்டும் தான் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றைத் தொங்கவிடுவோம். முடிந்ததும் அந்த பொருட்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம். அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறங்கள் மங்கியிருக்கும். இதுவே சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசுபோலவே இருக்கும்.
ஜன்னல்கள்
நம்முடைய வீட்டின் ஜன்னல்கள், வாயிற்படி போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை கட்டி வைத்திருந்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் அடையாமல் காக்க முடியும்.
ஷூ துர்நாற்றம்
பொதுவாக எல்லா வீடுகளிலும் நாம் எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் துர்நாற்றங்கள் ஏற்பட்டு விடுகிறது. அப்படி உண்டாகாமல் இருக்க செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் அந்த துர்நாற்றங்களில் இருந்து விடுபட முடியும்.
குறிப்பு
இவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பயன்படும். ஆனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும்.
Follow Us