Home Top Ad

சரித்திர படம் இயக்குவதற்காக பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலியிடம் சசிகுமார் ஆலோசனை பெற்றுள்ளார். நாடோடிகள் 2  படத்தில் நடித்து முடித்துள்ள சச...

ராஜமௌலி - சசிக்குமார் சந்தித்தன் பின்னணி

சரித்திர படம் இயக்குவதற்காக பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலியிடம் சசிகுமார் ஆலோசனை பெற்றுள்ளார்.

நாடோடிகள் 2  படத்தில் நடித்து முடித்துள்ள சசிக்குமார், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் `என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சசிக்குமார் அடுத்ததாக சரித்திர படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இப்படத்திற்காக இயக்குநர் ராஜலியை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலி - சசிக்குமார் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து ராஜமௌலி இயக்கும் படத்தில் சசிக்குமார் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ராஜமௌலி 'பாகுபலி 2' திரைப்படத்திற்குப் பிறகு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் கதை விவாதம் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே சசிக்குமார் கேட்டதன் பேரில் அவர் இயக்க இருக்கும் சரித்திர படத்திற்கான ஆலோசனைகளை ராஜமௌலி வழங்கியுள்ளார்.

0 coment�rios: