Home Top Ad

இந்தியாவில் செல்போன் பயன்பாடுகள் அதிகரித்த பின் அனைத்து ஃபோன் நெட்வொர்க் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஹை ஸ்பீடு டேட்டாக்களை வழங்கி ...

பார்ன் வெப்சைட் தொடர்ச்சியாக பார்ப்பவரா? - இதைப் படிங்க முதல்ல!

இந்தியாவில் செல்போன் பயன்பாடுகள் அதிகரித்த பின் அனைத்து ஃபோன் நெட்வொர்க் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஹை ஸ்பீடு டேட்டாக்களை வழங்கி வருகிறதுது. தினமும் பல வீடியோக்கள் பார்த்தாலும் தீராமல் இருக்கிறது ஜிபிகள்.

தினமும் சினிமா, பாடல்கள் என எல்லாவற்றையும் பார்த்து போரடித்துப் பின் தனிமையை போக்கிக் கொள்ள பலரும் பார்க்கத் தொடங்குவது பார்ன் வீடியோக்களைத்தான். ஆரம்பத்தில் விளையாட்டாக பார்க்கத் தொடங்குவபர்கள் பின் தினமும் பார்த்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு பார்ன் வீடியோ பார்க்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டு விடுகின்றனர்.

பார்ன் சைட் பார்ப்பதில் ஆண்களின் எண்ணிக்கையை போல் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. பார்ன் சைட் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் சிக்கல்கள் என்னென்ன என்பதை உளவியல் மருத்துவர் வந்தனாவிடம் கலந்துரையாடிய போது:-

பார்ன் சைட்டை அதிகமாக பார்க்க மூன்று முக்கியக் காரணம்  உண்டு. எல்லோருக்கும் ஈஸியாக கிடைப்பது, மேலும் இதைப் பார்க்க எந்தவொரு செலவும் செய்யத் தேவையில்லை. மற்றொரு முக்கியமான காரணம் பார்ன் சைட்டை பார்க்கும் போது நம் முகம் யாருக்கும் தெரியாது’ என்கிற தைரியம்.

நம் அந்தரங்க ஆசைகள் யாருக்கும் தெரியாதென எண்ணிக்கொண்டுதான் பலரும் பார்க்கிறார்கள். போதைமருந்து எடுத்துக் கொண்டால் அனைவருக்கும் தெரியும். ஆனால் பார்ன் சைட் பார்ப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதென எண்ணிக்கொண்டு பார்க்கிறார்கள்.

பார்ன் சைட்டை பெரும்பாலும் மொபைல் ஃபோன்களில் மட்டும்தான் பார்க்கிறார்கள். லேப்டாப்பிலோ அல்லது டேப்களிலோ பார்ப்பதில்லை. இதனால் பலரும் மன அழுத்தத்துடன் தனிமையாக இருக்கும் நேரங்களில் பார்ன் சைட்டை பார்க்கிறார்கள். பெண்களுக்கு ஆர்கஸம்  சீக்கிரமே கிடைப்பதால் தொடர்ந்து பார்க்கிறார்கள். மன அழுத்தம் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் பலரும் இதை பார்க்கிறார்கள் என்று சொல்லமுடியாது நல்ல வேலையில் இருக்கிற நன்றாக படிக்கிற கல்லூரி இளம் பெண்கள் கூட இதை பார்க்கின்றனர்.

இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலருக்கும் பாலியல் அறிவு எதுமின்றி வெற்று சுவாரஸ்யத்திற்கு பார்க்கத் தொடங்கி பின் பார்ன் சைட் பார்ப்பதற்கு அடிமையாகி விடுகிறார்கள். இதனால் தனியாக இருக்கும் நேரங்களில் சுய இன்பத்தில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள். சிலருக்கு பார்க்கும் போது கிடைக்கும் மிகையுணர்ச்சிக்காக இதில் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.

பார்ன் சைட் பார்த்ததிலே ஆண்களின் எனர்ஜி முழுவதும் போய்விடும். பின், செயலாக எதுவுமே செய்ய முடியாது. சிலருக்கு உடலுறவில் விந்து விரைவாக வெளியேறிவிடும். இதனால் மனைவியுடன் செயல்பட முடியாமல் உறவில் சிக்கல் ஏற்படலாம்.

பார்ன் சைட் பார்ப்பதில் அடிமையானவர்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும். அவர்களின் மூளை செக்ஸை நிகழ்த்தி பார்த்துக் கொண்டே இருக்கும். இன்னும் சிலர் தன்னுடைய துணையிடம் அந்த வீடியோக்களில் பார்த்தது போன்றே செய்ய வேண்டுமென வற்புறுத்தலாம். இந்த அறிகுறிகளை வைத்தே அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ளலாம். இவர்கள் நிச்சயமாக உளவியல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதிலிருந்து மீளலாம்.

தீவிரமாக செக்ஸுவல் அடிக்ஸன்  இருப்பவர்கள்தான் பெண்கள், குழந்தைகள் மீது ஏன்  விலங்குகளை கூட வன்புணர்வை செய்கிறார்கள்.

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை பள்ளியிலிருந்தே கொடுக்கவேண்டும்.முதலில் அவர்களுக்கு ‘குட் டஜ்’, ‘பேட் டஜ்’ பற்றிய ஆலோசனையும், அந்தரங்க உறுப்புகள் என்னென்ன என்பதை பற்றிய புரிதலையும் கொடுக்க வேண்டும். பின் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்திருப்பது பற்றிய அறிவையும்  கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகள் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளும் உடலளவில் முதிர்ச்சி அடையும் பருவம் உண்டு என்பதை சொல்ல வேண்டும் என்கிறார் மருத்துவர் வந்தனா.

பார்ன் சைட் பார்ப்பதால் நன்மைகளும் இருக்கிறது, சிலருக்கு உடலுறவு குறித்த சந்தேகங்களை பிறரிடம் கேட்கத் தயங்கி பலரும் இதைப்பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். சில தம்பதியர்களுக்கு உடலுறவு குறித்த புரிதலுக்காக சிலர் பார்க்கலாம். கட்டுப்பாடு எல்லாமே உங்களின் கையில்தான் உள்ளது என்கிறார் மருத்துவர்.

ஒரு காலத்தில் கெட்ட பழக்கமென ஒதுக்கி வைக்கப்பட்ட மது குடிக்கும் பழக்கத்தை இன்றைய நவீன காலத்தில் சோஸியல் டிரிங், எனச் சொல்லி பலரும் மதுவை அருந்தவே செய்கிறார்கள். ஒரு காலத்தில் மனக்கஷ்டம் என்றால் சாப்பிடாமல் தூங்காமல் இருப்பார்கள். இன்றைய காலத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் தங்களின் இயல்பான அளவை விட கூடுதலாக சாப்பிடவும் தூங்கவும் செய்கிறார்கள். எந்தவொரு செயலையும் அவரவர் இயல்பை மீறி தீவிரமாக தொடர்ந்து செய்யும் போது அதற்கு நாம் அடிக்ட் ஆகிவிட்டோம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

0 coment�rios: