Home Top Ad

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி இன்று 11 நாளாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்ற...

கருணாநிதிக்கு நிகழ்ந்த மிகப்பெரிய அவமானம்... இன்றும் மக்களை கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி இன்று 11 நாளாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் அரவிந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும்போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டைப் பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இரவு முதலே ஆயிரகணக்கான தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் கூடி அவருக்கு அதரவாக முழக்கமிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கடந்த 2001ம் ஆண்டில் நள்ளிரவில் மேம்பாலங்கள் கட்டுமான சர்ச்சைகளுக்காக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் அவருடன் அப்போதைய மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன் மற்றும் த. ரா. பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோது எடுத்த காணொளி தற்போது நெட்டிசன்கள் கையில் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.

1 comment:

  1. கருணாநிதி நோய்களில் இருந்து மீண்டு வருவார் என நம்புவோமாக.

    https://newsigaram.blogspot.com

    ReplyDelete